ஆதிகருமாபுரம் அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோவில் காணியாளர்கள் வரலாறு
பண்டைத்தமிழ்நாட்டில் பார்புகழ் நாலாறுநாட்டினில் பூன்துறைசைநாட்டின் துணைநாடாம் ஏழூர்நாட்டின் நல்லாட்சியர் காராளவம்ச வெள்ளாளர் பிறாழந்தைகுலத்தாரின் சிரந்தோர் காணியாட்சி வான்புகழ் கண்டு கோலாட்சி நடத்திவந்த வேளையில் ஏழூர் தேவதாசியிட்ட சாபகருமத்தில் விடுபட்டு குலம் தழைத்தோங்கிட ஏழூர் நாடாட்சி துறந்து காணிவிட்டு வெளியேறி செல்லாண்டியம்மன் அர்த்தானாரீஸ்வரர் செங்கோட்டுவேலவனார் அருள்பர்வையால் மலை அருகிலே காணிகண்டு சாப கருமம்தனை போக்கிட கருமாபுரமென்று புதுக்காணிக்கு பெயர்சூட்டி ஆதிகருமாபுரமென்று பெயரான இடந்தனில் பிறாழந்தைகுலம் அருகுபோல்வேரூன்றி ஆல்போல்தலைத்து வளர்ந்திட கோயில்கட்டி குலத்தெய்வமாய் வணங்கிவரும் செல்லாண்டியம்மன்தாயே! நாட்கள் செல்லசெல்ல வளர்ந்தபிள்ளைகளுக்கு வரன்கேட்ட இடந்தனில் நலம்பேசி வரன்தாரொமென்று சொன்னவர்களே பொருள்தந்தகுலத்தாரென்று உறவுகொள்ள செய்த திரிசூலநாயகியே! பரம்பொருள்ய் வந்து குலதெய்வமென காத்தருளும் செல்லாண்டியம்மனே! பரந்தெழுந்த சமனண்முதலாம் பரசமய இருள்நீங்க அருள்புரியும் இறைவியே! அங்கத்திலிங்க பிரதிஷ்டைசெய்து அனுஷ்டான விதிதனை முடித்து அங்காள்மங்கை மலரடி துதித்து குலதெய்வமாய் அவதாரமெடுத்தவளே! கங்கைநீரடி குலதெய்வத்தை துதித்தார் நல்வழிபெற வழிகாட்டுபவளே! சங்கரி கெளரி சாம்பவி மகாசக்தியான எங்கள் செல்லாண்டியம்மன்தாயே! சிங்கம் சிலிர்த்து நிற்கும் நீ குடிகொண்டிருக்கும் சிங்காரகோயில்வாசலிலே! யாணை அசைந்துநிற்கும் நீ அருளாட்சி புரிகின்ற ராஜாகோபுரமுன்வாசலிலே! கருணைபொலி்யும் குலதெய்வமே அண்டிவந்தோர்க்கு அருள்புரியும் தாயே! இருள்நிறைந்த வழித்தடத்தினில் இருபக்கமும் வழித்துணைக்கு வருபவளே! பொருள்தந்தகுலத்தினரின் குறைதனைப்போக்கி நிறைதந்து காப்பவளே! நாளும்பொழுதும் உனை வேண்டிவணங்கி வரும் பொருள்தந்தகுலமக்கள் வாழ்வுத்தேடி எங்குசென்று வாழ்ந்தாலும் அங்கு சீர்சிறப்போடு ஓங்குபுகழோடு வம்சம்பெருகி வாழ்ந்திட அருள்பாலித்து பாதுகாத்து வரும் அருள்மிகு செல்லாண்டியம்மன் தாயே! போற்றி! போற்றி!!!
சங்ககாலத்தில் நீர்வளம் கண்ட கொங்கர்:-
அன்றும் இன்றும் என்றும் மனிதன் உயிர்வாழ உணவுவேன்டும் அந்த உணவை கொடுபவர்கள் உழவர் பெரும்தகையாளர்கள் ஆவர்.அன்றைக்கு உணவுபொருட்களை உற்பத்தி செய்பவர்கள் அதாவது வெள்ளாமை செய்பவர்கள் என்ற கருத்தாழத்தில் வெள்ளார்கள் என்று அழைக்கப்பெற்று வந்தனர்.அந்த வெள்ளாளப்பெருமக்கள் தான் நிலத்திலுள்ள நீர் அதாரங்களை முதன்முதலில் கண்டறிந்து அதை வெளி கொணர்ந்து பன்படுத்தி உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்களாவர்கள்.
அன்றைக்கு "உண்பதும் உடுப்பதும் இன்றிகெடும்" என்றார் வள்ளுவர்.அன்றைக்கு உணவுக்கும் உடைக்கும் வேண்டுவனவெல்லாம் குறைவின்றி கிடைத்ததென்றால் அது கொங்குநாடு தான் .அதற்கு காரணம் மழைவளம் தப்பிய காலத்திலும் வளம்தப்பாத ஆழ்தகன்ற கிணறுகளைதோண்டி வேண்டியளவிற்கு கிணறுகள் பெற்றிருந்தது கொங்குநாடு ஆகும்.அதனால் தான் கிணற்று வளம் கொங்குநாட்டைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இல்லை என்பதற்கு
"கொங்கர்-கனைப்பொறி பிறப்ப நூறி வினைபடர்ந்து
கல்லுறத்தியற்றிய வல்லுவர்ப் படுவில்
பாருடை மருங்கின் ஊறல்..." அகம்-79
என்ற பாடல் நற்சான்றாகும்.
கிமு.இராண்டாம்நூற்றாண்டுக்கு முன்பும் சங்ககால்த்தில் கொங்குநாடு கிணற்றுவளம் பெற்று இருந்தது என்று கொங்குநாட்டு புலவர் குடவாயில் கீர்த்தானார் கூறியுள்ளார்.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கொன்கர் கிணறு வெட்ட மண்தோண்டும் போது பாறை தென்பட்டால் கடப்பாறையினால் குழிபோட்டு வெடிவைத்து பாறைகளை உடைத்து ஆழமான கிணறுகள் தோண்டியுள்ளார்கள் என்று நேரில் கண்டதைப் போல் பாடலில் கூறியுள்ளார்.கிணறு வெட்டி வெள்ளாண்மை செய்து வந்த வெள்ளாளர்களுக்கு உழவுத்தொழில் செய்ய ஆடுமடுகள் இன்றியமையாததாக இருந்தது.
வெள்ளாண்மைக்கு உரம் தேவை! உரத்திற்க்கு பட்டி தேவை!
பட்டிக்கு ஆடு தேவை! உழவுக்கு மாடு தேவை!
ஆகியவைகள் அவசியமானதாக இருந்ததோடு நல்லவருமானம் தருபவைகளாகவும் இருந்தது.அதனால் தான் காராளவம்சகுலமக்களை வாழ்த்தும் ஆன்றோர் சான்றோர் பெரியோர் பெருமக்கள்.
"பட்டி பெருகவேணும்! பாற்பாணை பொங்கவேணும்!
ஆடு மாடு பெருகவேணும்! வீடு பொழிய வேணும்!
காராளகுலவம்சம் தழைத்து விளங்கவேணும்!"
என்று வாழ்திவந்தார்கள்.
காராளவம்சகுலமக்கள் வெள்ளாண்மைத் தொழிலை செய்து வந்ததோடு ஆடுமடுகளையும் பட்டிபடியாக வளர்த்து வந்தார்கள்.அன்றைக்கு தமிழ்நாட்டிலுள்ள மக்கள் பெரும்பாலான கோயில்களில் நெய்தீபம் ஏற்றுவதற்க்கு நெய்கள் குடம் குடமாக கொங்குநாட்டிலிருந்துதான் பல இடங்களுக்கு ஏற்றுமதியாயின.
பூந்துறைநாடு சென்னிமலைமுருகன் திருக்கோயிலுக்கு நெய்தீபம் ஏற்ற பிடாரிலுள்ள பொருள்தந்தகுலத்தினரும் கூரைகுலத்தினரும் நெய் கொடுத்து வந்தர்கள்.தமிழகததிலுள்ள பெருந்தெய்வங்களுக்கு தேவைப்படும் நெய்கள் கொங்குநாட்டிலிருந்துதான் கிடைக்கப்பெற்றது. இன்றைக்கும் கூட ஊத்துகுழிநெய பிரபலமானதாகும்.மொளசியில் ஆட்சி புரிந்த ஆந்தைக்குலத்தினர் மொளசி காணியை விட்டு வெளியேறியதில் ஒருபிரிவினர் அங்கேயே தங்கி ஆந்தைகுலத்திலிருந்து பிரிந்து தங்களை புதியகுலத்தவராக நிலைநாட்டும் வகையில் பிறழாந்தை என்று பெயர்சூட்டிகொண்டனர்.மொளசி கண்ணன்குலகாங்கேயன் உதவியுடன் ஏழூர்நாட்டை ஆட்சிபெற்றமைக்காக பிறழாந்தைகுலத்தினர் திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரருக்கும் செங்கோட்டுவேலவனுக்கும் நெய்தீபம் ஏற்றினர். அதன் பின்ன்ர் அதே பிறழாத்தைகுலத்தினர் பல ஆன்டுகளுக்குபிறகு ஏழூர் காணியைவிட்டு வெளியேறி கருமாபுரத்தில் காணி பெற்றம்மைக்காக திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரருக்கும் செங்கோட்டுவேலவனுக்கும் நெய்தீபம் ஏற்றினர்.கருமாபுரத்தில் செல்லாண் டியம்மனுக்கு கோயில் கட்டி பிரதிஷ்டை செய்து நெய்திபம் போட்டு வ்ந்ததனால்தான் பல சொதனைகளை கடந்து பொருதந்த குலத்தவர்கள் என்று மங்கா புகழ்பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வருகிறார்கள்.
கீழ்கரை பூந்துறை நாட்டின் ஊர்தொகைப்பாடல்:-
"மோருடன் முழசை குலவு மேமப்பள்ளி முற்றுத்தகடப்பாடியும்
மோடமங்கல மெழிப்பள்ளியிருப்புலி பிரதிமுட்டில் சிறு முளசையணிமூர்
நீருர் குமரமங்கையகரஞ்செதாபுரம் நிழலுற்றகருமாபுரம்
நீதிவட்டூர் மணலி கோக்களையு முஞ்சினியும் நிலை கொள் கூத்தம்பூண்டியும்
சீருரமானங்கூர் கொக்கராயன் பேட்டை தேவை காட்டாசி நல்லுர்
செய மாவிரட்டியுடனே லத்திவாடியுஞ்செய்யபடை வீடுபட்லூர்
ஏரூர் வயற்கழனூர் மண்டபத்தூர் தோக்கையின்பமிக சித்தந்தூர்
இணையில் கத்தாரியுடன் முப்பத்திரண்டூர்களினிய பூந்துறை நாடே!"
ஊர்த்தொகைப் பாடலில் கூறியுள்ள ஊர்கள்:-
1. மோருர்
2. முளசை
3. ஏமப்பள்ளி
4. தடப்பட்டி
5. மோடமங்களம்
6. கோழிப்பள்ளி
7. இருப்புலி
8. பிரிதி
9. சிறுமுளசை
10. அணிமூர்
11. குமரமங்கலம்
12. அகரம்
13. சேதாபுரம்
14. கருமாபுரம்
15. வட்டூர்
16. மணலி
17. கோக்களை
18. உஞ்சனை
19. கூத்தம்பூண்டி
20. ஆனங்கூர்
21. கொக்கராயன்பேட்டை
22. தேவணாங்குறிச்சி
23. காடச்சி நல்லூர்
24. மாவிரட்டி
25. லத்திவாடி
26. படைவீடு
27. பட்டிலூர்
28. கழனூர்
29. மண்டபத்தூர்
30. தோக்கைவாடி
31. சித்தளந்தூர்
32. கத்தேரி
கொங்கு காணிப்பட்டயம்:-
கொங்கு வேளாளர்க்குலப் பெருமக்கள் சோழநாட்டிலிருந்து வெளியேறி கொங்கு நாட்டில் காணி,ஊர் இவைகள் ஏற்படுத்தி கொண்டதை கொங் காணிப்பட்டையம் விளக்குகிறது.சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் மதுக்கரை(கோட்டக்கரை) செல்லாண்டியம்மன் கோயிலுக்கு அருகில் தங்கள் எல்லைகளை சரிசெய்து கொள்ளவும் அவர்கள்து நீதி நெறி முறைகள் பற்றி கல்ந்து பேசவும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுரை மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயிலில் கூடுவது வழக்கம் அந்த வகையில் பட்டையம் ஒன்று தயாரிக்கப்பட்டது.அப்பட்டயத்தின் முதற்கன் கரிகாலச்சோழன் வரலாறு சுருக்கமாக கூறப்படுகிறது.
கரிகாலச்சோழனுக்குச் சித்தபிரமை ஏற்படவே கொங்கு நாட்டில் அணைகள் கட்டி கொங்கேழ் சிவதலங்களுக்குச்சென்று தரிசித்து வந்தால் பிரம்மை நீங்கும் என்று கூறியதற்கு திருக்கடையூர் வந்து குருவாகிய ஆண்ட சிவசுப்பரமணியக்குருக்களை வணங்கி அவரையும் அழைத்துகொண்டு சடையன் தலமையில் வேளாளர் பெருமக்களுடன் கொங்குநாடுச்சோழர் தல்மையில் அனைவரும் கொங்குநாட்டிற்கு வருகின்றன்ர்.அப்போது கம்பநாட்டார் குலங்கோத்திரம் பிரித்து கொங்குநாட்டுகு அனுப்புகிறார்.வேளாளர் 124 குலங்கள் கூறப்படுகி்ன்றன.குலங்களுக்குரிய காணி வகுக்கப்படுகின்றன.திருக்கடையுர் குருக்களை வணங்கி அவருக்கு பல ஊர்களை மானியமாக அளிக்கின்றனர்.கொங்கு 24 நாட்டுகும் குருக்கள் நியமிக்கப்படுகிம்றனர்.இப்பட்டயம் சோழன் பூர்வபட்டயத்தின் சுருக்கம் போல் தெரிகிரது.பக்கம் சுருக்கம் கருதி அப்பட்டயத்தில் உள்ள சில வரிகள் மட்டும் பிரசுரிக்கப்படுகின்றன.
".....................................கலியுக சகாப்தம் 3409மேல் செல்லாநின்ற ரவுத்திரி வருஷம் சித்திரை மாதம் 21ம்ந்தேதி சுக்கரவாரம் பஞ்சமியும் திருவோண நட்சத்திரம் பாலவாக்ரணமும் சித்த நாமயோகமும் பெற்ற சுபதினத்தில் சேரன்,சோழன்,பாண்டியன் மூவராஜ்களும் மூன்று பிரிவாகச் சீமையாண்டு வருகிற விபரம்............................" "சோழ நாட்டிலிலுள்ள் குடிகள் வேளாளர் தொண்டை மண்டலம் வெளாளர் முதலிபேர்களும் தீக்ஷை திருமுடி பெற்றுகொண்டு கொங்கேழு சிவலாயமும் சேவித்து மேல் சிதம்பரம் சேவித்து சோழன் துறையென்றும் காஞ்சிமாநாதிக்கு 32 அணையும் கட்டிவைத்து சிவபிரதிஷ்டை அக்கிரகாரங்களும் ஆலயங்கள் சீர்நோத்தாராங்கள் வாவி சுபம் தடாகங்கள் செய்விது ராஜாக்கள் நீதாம் யென்று கட்டி வைத்து அதில் குடிகளுடன் கோட்டையும் கட்டி அதிகாரம் செலுத்திவந்து குலத்தெய்வமாகிய சோழீஸ்வரரையும் காலகாலலேஸ்வரரையும் அர்சித்தால் ராஜாவுக்கு சித்த பிரமை நிங்கி பரதேசியால் வந்த சாபம் விமோசனம் ஆகும்.......................................குருவுக்கு தாரை வார்த்து குடுத்தபின் கொங்குதேசத்துகு சுவாமி குருவுடன் வரும் பொது காவேரி கடன் கம்பநாட்டான் மரித்து குலகோத்திரங்கள் அறியாமல் கொங்கில் விடமாட்டோம்யொன்றார்கள். ஒரு முகூர்த்தங்க்குள்ளாக குலங்கோத்திரப்பிரிவுகளும் கவுண்டப்பட்டங்களும் செய்து காட்டினால் ஒப்புகொள்ளவோம் இல்லாவிட்டால் வந்தவழியே தொண்டை மண்ட்லம் போய்ச் சேருங்கள்யென்று சொன்னார்கள்...................................கம்பர் குலக்கோத்திரங்கள் பிரிவுசெய்தவிபரம் .கவி.சேரன்,பாண்டி,பனகன்,செங்கோன்,பெரியன்,செம்பன்,பவழன்,தூரன்,ஆந்தை,காடைகுலம்,........................................ஓதாளன் பாரம்சுமந்த பண்ணகுலம்,படியந்துண்ணும் பயிரகுலம்,தோடன்,வேந்தன்,தேவேந்திரன்,கூரை,பொன்னான் கொங்கினரே............................"
என்ற பட்டயவரிகள்மூலம் கொங்கு கீழ்கரைபூந்துரைநாடு மொளசியை ஆண்டு வந்த ஆந்தைகுலத்தினர் பின்னாளில் கண்ணன்குலக்காங்கேயன் ஆட்சிக்கு உட்பட்டபோது ஆந்தைகுலத்தினர் மொசியை விட்டு வெளியேறினர்.அப்போது அவர்களில் ஒரு பிரிவினர் அக்கேயே தங்கி நிலைபெற்று ஆந்தையிலிருந்து பிரிந்தவர்கள் என்று நிலைநாட்டும் வகையில் பிறழாந்த என்று தங்களை அறிவிதுக்கொண்டனர்.பின்னாளில் இந்த பிறழாந்தை குலத்தினர்தான் ஏழூர் நாட்டை ஆண்டு வந்தனர்.
ஏழூ நாடு ஆட்சியாளர் பிறழாந்தைகுலத்தினர்:-
ஆதியில் கீழ்கரை பூந்துரை நாட்டின் துணைநாடான ஏழூர் நாட்டை ஆண்டு வந்த பொருள்தந்த குலத்தினர் சீரோடும்,சிறப்போடும் காணியாட்சி நடத்தி வந்தனர்.ஏழூரில் ஆடலும்,பாடலும் மூலம் பிரசித்திப் பெற்று கற்பூர ஆய்,கற்பூரிவள்ளி என்னும் இரு தேவதாசிசகோதரிகள் செல்வசெழிப்புடன் வாழ்ந்து வந்தனர்.அவர்களுக்கு சந்ததியில்லை.அதனர் அவர்கள் "பலஉயிர்கள் வளர்ச்சிபிழைப்பு மார்க்கமுள்ள உபகாரமான நிலையான தருகருமத்தைச் செய்தால் புகழ் புண்ணியம் உண்டாம்"
என்று ஆன்றோர் சொன்ன வாக்குக்கேற்ப ஒருஏரியை கட்டினால் நீர்நிரம்பும்.அதனால் புஞ்சை நஞ்சை நிலமாகி உற்பத்திபெருகி ஊர்செழிக்கும் பலகுடித்தனங்களுக்கு தொழில்வாய்ப்பு ஏற்படும். பல பிராணிகள் உண்டு குடித்து பிழைக்கும் என்று எண்ணி தீர்மாணித்த சகோதிரிகள் எல்லாம் தங்களிடம் உள்ள பொருள்களை எல்லாம் நல்லெண்ணத்துடன் ஏரிவெட்ட ஒட்டர்களிடம் கொடுத்தனர்.ஏரி வேலை முடிந்தது.ஏரியை வெட்டிய ஒட்டர்களுக்கு கொஞ்சப்பணம் பாக்கியை ஆடல் பாடல் கொண்டதேவதாசிச்சகோதரிகள் கொடுக்க வேண்டி இருந்தது அந்த கொஞ்சம் பண்த்தை கேட்டு ஒட்டன் நச்சரிக்க அதற்கு இருசகோதிரிகள் யாராவது கடன் கொடுத்தால் சீக்கிரம் கொடுத்து விடுகிறோம் அதுவரை கொஞ்சம் பொருத்து இருங்கள் என்று மனமிரங்கி வேண்டி கேட்டுக்கொண்டனர்.யாரும் கடன் கொடுக்கவில்லை.தேவதாசிப்பெண்கள் என்று நினைத்து தானே யாரும் பணம் கொடுக்கவில்லை என்று நினைத்து மிகவும் மனம் வருந்தி கலங்கி நின்றனர்.கடைசியாக காணியாட்சி கவுண்டர்களிடம் சென்று நிலைமையை எடுத்துகூறி கடன் கேட்டனர்.அப்பொது இவர்களுக்கு யாரும் கடன் கொடுக்காதபொது நாம் கடன் கொடுத்தால் நம் புகழுக்கும்,நடத்தைக்கும் களங்கம் க்ற்பித்து விடுவார்களோ? என்று அஞ்சி கடன் கொடுக்க மறுத்து விடுகின்றனர்.மற்றவர்களிடம் கடன் கொடுக்கும் நிலை இருந்ததோ இல்லையோ ஆனால் காணியாட்சியாளர்கள் கடன் கொடுக்கும் சூழல் இருந்தும் கொடுக்காதது கண்டு இருச்சகோதரிகளும் மனம் வெதும்பினர்.நாளை ஒட்டர் வந்து பணம் கேட்டு மானத்தை இழப்பதை விட பிராணத்தை இழப்பதே மேல் எனத்துணிந்தார்கள்.அன்று இரவு நல்ல மழை பெய்தது.
"சிலர் தொடங்கும் கருமம் முற்றுப் பெறாமல் பொவதுண்டு!
சிலர் தொடங்கும் கருமம் கடவுளின் சகாயத்தால் முற்றுப்பெறும்!"
அடுத்தநாள் ஏரியில் நீர் நிரம்பியது ஏரிக்கு சென்றுபார்த்த இருசகோதரிகள் நீர் நிரம்பியது கண்டு சந்தோஷமடைந்தனர்.நாம் எந்த நோக்கத்திற்காக ஏரிவெட்டினோமோ அந்த நோக்கம் நிறைவேறிவிட்டது.இனி நாம் இந்த ஏரி நீரில் விழுந்து மூழ்கிவிடுவோம் என இருவரும் பேசி முடிவு செய்து இருவரும் தலைமேலே கை குவித்து கொண்டு இருகண்களையும் மூடிக்கொண்டு சற்று நேரம் ஈசுரத்தியானம் செய்து நின்றார்கள்.அப்போது மூத்த சகோதரி கண்விழித்து ஏழுர் நாட்டு காணியாட்சியாளர்களை தருமகருமத்திஅற்கு உதவாதவர்கள் என்று மனதாள் சபித்து
"எங்கெங்கும் மழைபொழிந்து செழிக்க்ட்டும்!
ஏரியில் நீர் நிரம்பி பலர் பயன் பொறட்டும்!
ஏழுர் காணியாட்சியர் கருவருத்துப் போகட்டும்!
வந்த குடி வளரட்டும் இருந்த குடி மருவட்டும்!"
என்று சாபமிட்டு விட்டு இளைய சகோதரியை கைகளில் கோர்த்து கொண்டு ஏரியில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டனர்.அப்போது துரத்தில் இவர்களை பார்க்க வந்து கொண்டு இருந்த ஒட்டன் ஓடிவந்து இந்த ஏரியை வெட்ட எவ்வளவோ பணம் கொடுத்தீர்கள்.கொஞ்ச பணத்தை நீங்கள் எப்போது கொடுக்க முடியுமோ அப்போது கொடுங்கள் என்று சொல்லத்தானே வந்தேன்.அதற்குள் இவ்வாறு செய்து விட்டீர்களே! தருமகாரியம் செய்த நீங்கள் என்னால் உயிரை மாய்த்து கொண்டார்கள் என்று நாளை ஊரார் பேசுவார்களே இனி நானும் இக்குளத்தில் விழுந்து மாண்டு போவதே மேல் என்று சொல்லி ஒட்டனும் குளத்தில் குதித்து உயிர் துறக்கிறான்.அவனுடன் வந்த நாயும் அவனுடன் குளத்தில் குதித்து மாண்டு போகிறது.பின்னாளில் ஊரார்கள் அந்த நான்கு உருவங்களுக்கும் கல்லில் அடித்து அந்த ஏரிக்கரையில் நட்டு வைத்தார்கள்.இன்றும் அந்த நாட்டிருக்கும் கல் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
கருமாபுரத்தில் பொருள்தந்தகுலத்தினர்காணிபெற்ற வரலாறு:-
ஏழுர் நாட்டை ஆண்ட பிறழாந்தைகுலத்தினர் (பொருள்தந்த‘குலத்தினர்) ஏழுர் அண்ணன்மார் சுவாமிகோயில், கட்டியண்ணன்கோயிலில் காணியுரிமையுடையவராவார்கள். குறுந்லமன்னன் கட்டியண்ணன் நினைவாக கட்டியண்ணன் கோயில் கட்டபெற்றது. " கட்டி மகீபன் பள்ளு" என்னும் இலக்கியம் கட்டி மகீபன் பெருமையை எடுத்துக்கூறுவதாகும். ஏழுரில் காணியாட்சியாளர்கள் பொருள்தந்த குலத்தினர் என்பதற்கு பழனிவேலகவுண்டன் மகன் கட்டிக்கவுண்டன் வரலாறே ஒரு ஆதாரமாகும்.
ஏழூரில் தேவதாசிப்பெண்கள் புதியதாக கட்டியஏரியில் நான்கு உயிர்கள் மாண்டுபோன செய்ததையும்,மூத்த சகோதரி தங்கள் குலத்தினரைசபித்து சாபமிட்டுவிட்டு இறந்த செய்தியும் ஏழூரில் காணி்யாட்சியாளராய் இருந்து வந்த பிறாழந்தைகுலத்தினருக்கு அடிமனதை வருடி ஆழமாய் பதிந்தது. ஊராரின் பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஆளாகக் கூடாது என்று பயந்து தானே நாம் செய்யதவறிய தருமகரும் காரியத்தால் இன்று இவ்வாறான கொடிய பாவத்திற்கும்,சாபத்திற்கும் ஆளாகவோண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டதென நினைத்து இனி இந்த ஏழூரில் இருந்தால் நம் காராளவம்சத்து பிறழாந்தைகுலம் தேவதாசிப்பெண்களின் மூத்தசகோதரி சாபத்திற்கு ஆளாகி அழிவையும் சரிவையும் எதிர்கொள்ள வோண்டிவரும்.ஆகவே இனி இந்த காணியை விட்டு வெளியேறி வேறு காணியை தேடிசெல்வதே இந்த சாப கருமத்திர்கு பரிகாரமாகும் என்று நினைத்து ஏழூர் காணியாட்சியளர்களான பிறழாந்தைகுலத்தினர் நிலம் ,வீடு, மற்றும் விளையும் பொருள்களை இழந்துவிட்டு ஏழர் காணியாட்சியளார் என்ற பெயரை துறந்துவிட்டு தங்கள் பண்டம்பாடிகளைகளோடு ஏழூரை விட்டு வெளியேறி செல்வதென்று முடுவெடுத்தனர். இனி நாங்கள் செல்லும் புது இடத்தில் எங்கள் குலம் தழைத்தோங்கி வளர்ந்து பெருகவென்டும் என்று காராளவச ஆதிகுலதெய்வமான மாயானூர்செல்லாண்டியம்மனை வேண்டிவணங்கினர். வடக்குவாழம் என்ற பொன்மொழிக்கேற்ப வடமேற்குதிசை நோக்கி காராம்பசு செல்லும் வழித்தடத்தை பின்தொடர்ந்து பண்ட்ம்பாடிகளை ஒட்டிக் கொண்டு சென்ற்னர்.காராம்பசு செங்குன்றத்துமலையருகே வந்தபோது பொருள்தந்தகுலத்தினர் அர்த்தனாரீஸ்வரர் ,செங்கோட்டுவேலவனை வேண்டி நீங்கள் அருளாட்சிபுரிக்ன்ற செங்குன்றத்தக்கருகிலேயே எங்களுக்கோர் நல்லக்காணியை ஏற்படுத்திதரவேண்டும் என்று வணங்கிச் சென்றனர்.வடக்குநோக்கி சென்ற காராம்பசு ஓரிடத்தில் படுத்துக்கொண்டது. பிறழாந்தைகுலத்தினர் இதுதான் நம் காணியென நினைத்து பண்டம்பாடிகளுக்கு அங்கேயே பட்டியமைத்து குடிகொண்டு நிலைப்பெற்றனர். பின்னர் சுற்றியுள்ள வனங்களை அழிந்து கழனியாக்கி வெள்ளாண்மை செய்து வரலாயினார்.நாளுக்குநாள் வெள்ளாண்மை செழித்து வம்சம் பெருகி குலம் தழைத்தோங்கி வருவதைகண்டு இதற்கெல்லாம் நாம் வேண்டிவணங்கிய அந்த மாயனூர்(மதுக்கரை) செல்லாண்டியம்மன் அனுக்கிரஹமேயாகும் என்று எண்ணி செல்லாண்டியம்மனுக்கு அங்கு கோயில் எழுப்பி குலதெய்வமாய் பிரஷ்டைசெய்து வணங்கிவழிப்பட்டு சிறப்புபெற்று வாழ்ந்து வரலாயினர்.
ஏழூரில் இருதேவதாசிப்பெண்கள் தருமகரும ஏழூர் காணியை விட்டு பெயர்,பொள்களை இழந்த்துவிட்டு வரவேண்டிய துர்ப்பாக்கியநிலை ஆகிவிட்டது.அக்கருமபாதிப்பு என்றைக்கும் மனதில் வடிவாய் நிலைத்து நினைவுகூறும் வகையில் புதுக்காணிக்கு "கருமாபுரம்" என்ற பெயர் நாமம் சூட்டி மற்றகுத்தினரால் பொருள்தந்தகுலத்தினர் என்று பெருமையோடு அழைக்கப்பெற்று வாழ்ந்து வரலாயினர்.
கருமாபுரம்காணி பெருள்தந்தகுலத்தினர் பலகாலகட்டங்களில் வரட்சியின் காரணமாகவும்,வேட்டையாடச்சென்றதின் காராணமாகவும் சிலர் கருமாபுரம்காணியைவிட்டு வெளியேற்ச்சென்று காடையூர், தோட்டக்குற்ச்சி, பிடரியூர், மேல்ஓரத்தை், ஆலாம்பட்டி, ஆறுத்தொழுவு, மாவுரெட்டிபட்டி, மத்தூர், துராம்பாடி, பிள்ளைகரை, ஈஞ்சம்பள்ளி, மாம்பூண்டி, கருர், கொங்கணபுரம்,
பெருமாநல்லூர், தலையூர், புன்னம், பவுத்திரம், பரமத்தி, ஆதியூர், சேமூர், உறையூர், விஜயமங்களம், அமுக்கியம், திங்களூர், குன்னத்தூர், நாட்டாமங்களம், கலியாணி, நவனி, வைகுந்தம், தோளூர், பழனி, மதுரை,இருக்காலூர் உட்பட 35 ஊர்களைப் காணி பெற்றனர்.
பெருள்தந்தகுலம் என்னும் பெயர்பெற்ற வரலாறு:-
கருமாபுரத்தில் காணி பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வந்த பெருள்தந்தகுலத்து வம்சங்கள் நாளுக்குநாள் பெருகி வந்தபோது தங்கள் குலத்து ஆண்பிள்ளைகளுக்கு பெண்கேட்டும்,பெண்பிள்ளைகளுக்கு மாப்பிள்ளை கேட்டும் அக்கம்பக்கத்து மற்றகுலத்தார்களிடம் சென்று கேட்டபோது மாமன்,மைத்துனர் என்ற உறவு முறைகாரணமாக ஏழூர் காணியாட்சியளர் என்ற பெயரை இழந்து ஏழூர் காணியிளுள்ள பூமி,வீடு,பெருள்களை இழந்து வந்த நீங்கள் பெயரிழந்தகூட்டம்,பொருள்யிழந்த கூட்டாமாச்சே உங்களுக்கு யார் பெண் கொடுப்பார்கள்,பெண்கட்டுவார்கள் என்று கேலிநக்கலாக,ஏளனமாக பேசியதைக் கேட்ட பிறழாந்தைகுலத்தினர் கருமாபுரம் செல்லாண்டியம்மன் கோயிலில் அனைவரும் கூடிநாம் எத்தனையே பேர்களுக்கு பெருள்தந்து இருக்கிறோம்.ஏழூரில் பெயருக்கும்,நாடத்தைக்கும் களங்கம்வரக் கூடதுயென்று பயந்துதானே அந்த தாசிகளின் தருமகாரியத்திற்கு பொருளுதவி செய்யவில்லை.இவ்வாறு இருக்கும் பட்சத்தில் நம்மை பொருள் இழந்த கூட்டம் என்று பேசுகிறார்களே!ஏசுகிறார்களே! என்று மனம்வருந்தி
"தாயே!செல்லாண்டியம்மா! இதற்கு நீதானம்மா ஒருவழி காட்டவேட்ணூம்!" என்று அனைவரும் வேண்டி வணங்கி அப்போது செல்லாண்டியம்மன் ஒரு சிறுமி சிரசுமேல் ஏறி,
"என்னை வோண்டி வணங்கி நிற்கும் குலமக்களே! பொருளுக்கும், பெயருக்கும் பேர்பெற்றவர்கள் நீங்கள் ! இனி நீங்கள் பேரும், பொருளும் இழந்தவர்களல்ல ! பொருள்களை அள்ளி அள்ளி தருங்கின்றவர்கள் ! இனி ஏங்கள் பெண்ணை கட்டுவர்களுக்கு இன்னன்ன பொருள் தருவோம் என்று கூறுவீர்களேயானால் உங்கள் பெண்ணை கட்ட நான் நீ என்று போட்டிபோட்டு அக்கம்பக்கத்து குலத்தவர்கள் வருவார்கள் அப்போது நீங்கள் பொருள்தந்த குலத்தவர்கள் என்று பேசி அழைக்கப்படுவீர்கள்" என்று அருள்வாக்கு சொல்லிவ்விட்டு சொல்லாண்டியம்மன் சிறுமி சிரசுலிருந்து மலைஏறியது.சொல்லாண்டியம்மன் சொன்ன அருள்வாக்குபடி கடைப்பிடித்து வந்தனர்.அதன்பிறகு மற்றகுலத்தினர் இவர்கள் குலத்தில் பெண்எடுத்து பெண்கொடுக்க வரலாயினர்.அன்று முதல் பொருள்தந்தகுலத்தினர் என்று பெயர் பெற்று பார்புகழோங்கி சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வரலாயினர்.ஏழூர் பிறழாந்தைகுலத்தினர் கருமாபுரம் பொருள்தந்தகுலத்தினர் என்று பெயர் பெற்று வாழ்ந்து வந்தாலும் இவர்கள்
"பிறழாந்தைகுலாத்தாரென்கின்ற பொருள்தந்தகுலத்தார்கள்
புகழ்ச்சிக்கு மயங்குபவர்கள் ! இகழ்ச்சிக்கு பயப்படுபவர்கள் !"
இதுவே இவர்களின் வெற்றிக்கும் விழ்ச்சிக்கும் காரணமாகும்.இவர்கள் புகழ்ந்துபேசும் பேச்சுகளில் மயங்கி இவர்களின் உரிமைகளையும், உடைமைகளையும் இழந்துள்ளனர் என்பதற்கு அன்றுமுதல் இன்றுவரை பலநிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன.
பொருள்தந்த குலத்தினரின் காணிப்பாடல்:-
ஏழூர்நாட்டை சீரோடும் சிறபோடும் ஆட்சிபுரிந்து வந்த பிறழாந்தைகுலத்தினர் தேவதாசிப்பெண்களின் தத்ருமகரும்சாபத்திற்கு பயந்து நாடு காணிதுறந்து காணியாட்சியாளர் என்ற பெயரும் துறந்து பூமிவீடு பொருள்களையும் இழந்து காணிவிட்டு வெளியேரி காராளவம்சத்தின் ஆதிகுலத்தெய்வம் மாயானூர் செல்லாணாடியம்மன் வேண்டி வணங்கி வந்ததன் பலனாகவும் அர்த்தனாரீஸ்வரர் செங்கோட்டுவேலவன் அருளாசியாலும் செங்குன்ற (திருச்செங்கோடு) மலையருகில் காணிப்பெற்றனர்.தருமகருமத்தால் காணிவிட்டுகாணி பெற்ற காணிக்கு காருமாபுரம் என்று பெயரிட்டு பெண் கொடுத்து பொருள்தந்தனால் பொருள்தந்தகுலத்தினர் எனப் பெற்று அழைத்து வரலாயினர்.பின்னர் மழைபெய்யாமல் வறட்சி ஏற்பட்டு பஞ்சத்தினால் பொருள்தந்தகுலத்தினர் கருமாபுரம் காணியைவிட்டு பலவாறு பலபக்கம் சென்று காணி பெற்றனர் அவ்வாறு பொருள்தந்தகுலத்தினர் காணிப்பெற்ற ஊர்களைப் பற்றி இருக்காணிப்பாடல்களில் கூறியுள்ளன.
பொருள்தந்தகுலத்தினரின் முதல்காணிப்பாதல்:-
"ஆதிகருமாபுரம் காடையூர் தென்பழனை ஆதியூர் விஜயமங்கை அமுக்கியம் பரமுத்திபுன்னமது தோடயம் ஆலாம்பாடி ஆறை ஏழூர் சோதிபுரம் கொங்கணாபுரம் வஞ்சி முத்தூரும் சொக்கர்வாழ் மதுரை உறையூர் சுயமான நல்லூர் பிடாரியூர் மாம்முண்டி, சொற்பொருளின் மாவுரெட்டி தாதுலவு இடமானேமி சேமூருடன் தலையூர் நல்தூர பாடி தமிழ் பெற்றப்பிள்ளைக்கரைக்கதிபதிராக வளர்தார் பெற்ற கொங்குவேளீர் நீதியுள்ள மன்னவர்கள் சிற்றம்பலத்தாரை நினைக்கின்ற கங்கை குலமகன் நேர்மையது தவறாது பொருள்தந்த கோத்திரர் நிலையுடன் வாழ்க நன்றே!"
முதல்காணிப்பாடலில் ஊர்கள்:-
1. கருமாபுரம்
2. காடையூர்
3. பெருமாநல்லூர்
4. ஆதியூர்
5. விஜயமங்கலம்
6. அமுக்கியம்
7. பரமுத்தி
8. புன்னம்
9. தோட்டக்குறிச்சி
10. ஆலாம்பாடி
11. ஆறுதொழுவு
12. ஏழூர்
13. கொங்கணாபுரம்
14. கரூர்
15. முத்தூர்
16. மதுரை
17. உறையூர்
18. நல்லூர்
19. பிடாரியூர்
20. மாம்முண்டி
21. மாவுரெட்டி
22. சேவூர்
23. தலையூர்
24. தூரம்பாடி
25. பிள்ளைக்கரை
பொருள்தந்தகுலத்தாரின் இரண்டாம் காணிப்பாடல்:-
"திருமரபு கருமாபுரம் காடையூர் மதுரை திங்களூர் ஆதியீரும்
திறமான குன்னத்தூர் முத்தூர் அமுக்கியம் ஜெயவிஜயமங்கை
திருவுலவு புன்னம் பவுத்திரம் தோழூர் தழைத்த ஆலாம்பாடியும்
தாதவிழ் மலர்ந்த பஞ்சளை மாவிரட்டியூர் திருபெருமா நல்லூருடன்
கருதரிய பழனியும் பிடாயூர் பரமுத்தி காணியெனவே படைத்தாய்
கமலமலர் அருள்வதன் சென்னியங்கிரிமுருகர் கழணைய மறவாதவர்
பொருமைபெரு பொருளந்தை குலதிலகனென விபேகன் குழந்தைவேலன்
பெற்ற கண்மணியான பழனிமழைநாயகன் பிரபுடிக மகராயனே !"
என்று கூரும் இரண்டாவது காணிப்பாடலில் மேலும் ஜந்து காணியூர்கள் கூறப்பாடத ஜந்து ஊர்களும் சேர்த்து,
1. திங்களூர்,
2. குன்னத்தூர்,
3. பவுத்திரம்,
4. தோழூர்,
5. பழனி,
6. ஈஞ்சம்பள்ளி,
7. மேல் ஓரத்தை,
8. மண்ணறை,
9. திருப்பூர்,
10. அக்காலியூர் ஆகிய 10 ஊர்களோடு 35 காணியூர்களாகும்.
கருமாபுரம் செல்லாண்டியம்மனை குலத்தெய்வமாக வணங்கி வாழ்ந்து வந்த பொருள்தந்தகுலத்தினர் வறட்சிகாலத்தில் பண்டம்பாடிகளுக்கு தீவனத் தேவைக்காக காணிவிட்டு வெயேறிச்சென்றனர்.இதனால் கருமாபுரம் செல்லாண்டியம்மன்கோயிலைச் சுற்றியுள்ள பூமிகள் வெறிச்சோடிக் கிடந்ததால் மற்றவர்கள் அப்பூமியில் குடியேறிக்கொண்டனர். இன்றைக்கும் கருமாபுரம் செல்லாண்டியம்மன்கோயில் காணியாளர் பொருள்தந்த குலத்தினர் சற்று தள்ளி தொலைவில்தான் உள்ளனர். அதனால் கோயிலில் சுவாமிக்கு தினமும் பூஜை செய்ய பண்டாரத்தை பணிநியமித்தம் செய்து கோயில் பூஜை தவறாமல் நடத்தி வரச் செய்தனர்.இதணால் துரத்திலிருந்து வரும் காணியாளர் பொருள்தந்தகுலத்தினர் தங்குதடையின்றி குலதெய்வத்தை தரிசனம் செய்து வணங்கி வேண்டிச்செல்ல வழிவகை ஏற்பட்டது. காராளவம்சவெள்ளாக் கவுண்டர்கள் பெரும்பாலான குல தெய்வக்கோயில்களில் பூஜை செய்ய பண்டராங்களைநம்பி பணிநியமித்தம் செய்துள்ளனர்.இது வாழையடிவாழையாக இருந்து வருகிறது. பண்டராங்கள் வெள்ளாக்கவுண்டர்களின் குலத்தெய்வக் கோயில் பூஜை செய்வதற்கு மட்டுமே சுதந்திரம் பெற்றவர்கள் ஆவர். சில கோயில்களில் காணியாளர் குடிபாட்டுக் குலமக்களும் பூஜை செய்து வருகிறர்கள்.வெள்ளாக் கவுண்டர் குலத்தெய்வக்கோயில் முழுக்கமுழுக்க அக்கோயிலைச் சேர்ந்த காணியாளக் குடிபாட்டுக் குலமக்களே உரிமையுடையவர்கள் ஆவார்கள். ஒரு குலதெய்வக்கோயிலைச் சேர்ந்த காணிக்குடிபாட்டு குலம்மக்களுக்கு அடுத்த குலத்தெய்வக்கோயிலில் எவ்வித உரிமையும் கிடையாது. அவர்கள் உறவினர் என்ற முறையில் வந்து வணங்கி விருந்து உண்டுச்செல்லலாம். இது காராளவம்சவெள்ளாக்கவுண்டர்களின் அனைத்துகுலதெய்வக் கோயில்களில் நடைமுறையில் இருந்து வருகின்ற பாரம்பரிய கலாச்சார பழக்கவழக்க முறைகளாகும்.ஆனால் சில தவிர்க்கமுடியாத காரணங்களால் பெண் கொடுத்த வகையில் பிறகுலதெய்வக்கோயிலுக்குரிய குலக்காணியாளருக்கு காணியுர்மை, கோயில் உரிமை கொடுத்த வழக்கம் உண்டு.அந்த வகையில் பொருள்தந்தகுலத்தைச் செர்ந்த வெள்ளாப் பெண்னைக் கட்டியவகையில் காணியும் கோயில் முறைமையும் பெற்ற வரலாறு உண்டு.அதேபோல் கருமாபுரம் காணியைச்சேர்ந்த பொருள்தந்த குலத்தினர் ஈங்கூரில் ஈஞ்சன் குலத்தில் பெண் எடுத்து சம்மந்திகளாகி ஈங்குரில் பாதி காணியுரிமையாக பிடாரியூரைப் பெற்றனர். பின்னாளில் இவர்களில் ஒருபிரிவினர் கோபிகள்ளிப்ப்ட்டியில் குடியேறினர். கருமாபுரக்காணி பொருள்தந்தகுலத்தினர் முத்தூரில் காணிப்பெற்று ஜந்தாவது காணியாளராயினர்.அதேபோல் கரூர் தோட்டக்குறிச்சியில் வேட்டையாடச்சென்றபோது வேடவர்களுடன் போரிட்டு வென்று தோட்டக்குறிச்சியில் காணிப்பெற்று மலையம்மனை குலதெய்வமாக வணங்கி வருகிறார்கள் இவர்களில் ஒருபிரிவினர் மேல்ஓரத்தையில் அண்ணன்மார் சுவாமிக்கு கோயில் எழுப்பி குலதெய்வமாக வணங்கி வருகறார்கள்.ஆலம்பாடியில் காணிபெற்று அண்ணன்மார்சுவாமிக்கு கோயில் எழுப்பி குலதெய்வமாக பொருள்தந்தகுலத்தினர் வணங்கி வருகிறார்கள். ஈரோடு வட்டம் ஈஞ்சம்பள்ளி கீரமடையில் காணிப்பெற்று பொருள்தந்தகுலத்தினர் வேலத்தாளை குலதெய்வமாக வணங்கி வருகின்றனர். ஆறுத்தொழுவில் காணிபெற்று காளியம்மனை குலதெய்வமாக வணங்கி வருகின்றார்கள். ஆக பொருள்தந்தகுலத்தினர் எங்கு சென்று காணிபெற்று அங்கு கோயில் எழுப்பி வெவ்வேறு பெயரில் குலதெய்வங்களுக்கு பெயர்சூட்டி வணங்கி வாழ்ந்துவந்தாழும் அவர்களின் ஆதிகாணி கருமாபுரம் தான் என்பது வரலாற்று ஆண்வாளர்களின் கருத்து.
ஆதிகருமாபுரம் செல்லாண்டியம்மன்திருக்கோயில் காணி பொருள்தந்தகுலத்தைப்பற்றி செப்பேடு மற்றும் ஆவணச்செய்திகள்:-
1. பொருள்தந்த கோத்திரபுலவர்சேப்பேடு-கொங்குநாட்டுச்சமுதாய ஆவணங்கள். பக்கம் 110இல் கடைசிவரியில்
"கருமபுரம் செல்லாண்டியம்மன், பெருமாள், கொங்கணாபுரம் செல்லஅம்மன், ஏழூறு பண்ணைஅம்மன், தேசிநாயணன், பிள்ளை குலத்து செல்லாண்டியம்மன், எரணாபுரம் பெருமாள், மாறிஅம்மன்துணைசறுவலோக தேவாதிகள் துணை. கருமாபுரம் பொருளந்தை கோத்திரத்து பட்டையம்" பக்கம் 111இல் கடைசி வரியில் கடைசி.
"கருமாபுரம் அவரது காங்கயருங்கூடி கருமாபுரம் நல்லாக்கவுண்டன் குமாரன் முதலிக்கவுண்டன் தீத்தாப் பெருமகன் பொன்னாலி புலவனுக்கு கருமாபுரம் பொருளந்தை குல மெச்சனெனப் பேருங்குடுத்து ......"
2. கீழ்கரைப்பூந்துறை நாட்டுப்பட்டயம் – கொங்குநாட்டு சமுதாய ஆவணங்கள் - பக்கம்-119. கடைசிபத்தியில் திருஞ்சங்கோடு அர்த்தனாரீஸ்வரருக்கும் சுப்பிரமணியருக்கும் கார்த்திகை அன்று உச்சி கால கட்டளை ஏற்று நடத்த கீழ்க்க்ரைபூந்துறை நாட்டிலிலுள்ள 32 ஊர்களில் 18 ஊர்களிலுள்ள காணியாளக்கவுண்டர்கள், நாட்டுகவுண்டர்கள்,மற்றகவுண்டர்கள் , குடியானவர்கள், அக்கிரகாரத்தார்,கணக்குபிள்ளைகள், ஓபளிபாரு பத்தியக்காரர்கள் அனைவரும் ஒன்று கூடி கிரமாம் ஒன்றுக்கு 6பொன் 5பணம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டதை 1734 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ந்தேதியன்று சிவராம ஆசாரி அவர்கள் எழுதிய பட்டயத்தில் கூறியிருப்பதாவது.
"ஸ்வஸ்திஸ்ரீசாலிவாகன சகப்தாம் 1656 மேல் செல்லாநின்ற ஆனந்த வருஷம் தை மாதம் இரண்டாம் தேதி ஸ்ரீமத் ஆத்திரேய கோத்திரம் மைசூர் சிங்கா சானதீசுர மகா-ள-ள-ஸ்ரீ கிருஷ்ணராஜ துர்க்காதி பத்தியம் ராஜஸ்ரீ சஞ்சி வேட்டத்து ராஜாவையானவர்கள் அப்பனை படிக்கும் காரணிகாரர் சம்மதப்படிக்கு கீழ்கரை பூந்துரை நாட்டில் மோரூர், தகசப்பாடி, மணலி, ஆனங்கூர், குமாரமங்கலம், படைவீடு, கூத்தம்பூண்டி, கத்தாரி, சித்தளந்தூர், பள்ளிப்பாளையம், இருப்புலி, காவல் குறிச்சி , கருமாபுரம், மோடமங்கலம், வட்டூர், தேவணாங்குறிச்சி..."
3. பிடாரியூர்பட்டயம்-கொங்குநாட்டுச் சமுதாய ஆவணங்கள் பக்கம்-23இல் 2வது பாராவில். பூந்துறை நாட்டிலுள்ள பிடாரியூர் ஈஞ்சக்கூட்டம் கூத்தக் கவுண்டர் மகள் வெள்ளைப்பெண் பழனியம்மாளைக் கருமாபுரம் பொருள்தந்த கூட்டம் பள்ளிக்கூடத்தான் குழந்தை வேலப்பகவுண்டருக்கு மணமுடித்து பிடாரியூரில் 4900 வள்ளக்காட்டை காணியாக கொடுத்ததை
"அதுக்கு முன்னமே குடுமி வேட்டுவன், சிவபிராமணன், கொங்கச்செட்டி, ஈஞ்சங்கூட்டம் ரகுநாதசிங்கவுண்டன் கூத்தக் கவுண்டன் மகள் வெள்ளைப்பெண் பழனியம்மாளை பொருள்தந்த கூட்டம் பள்ளிக்கூடத்தான் குழந்தை வேலப்பகவுண்டருக்கு வெள்ளைப் பழனியம்மாளையும் குடுத்து பிடாரியூரும் குடுத்து விட்டான் ".
ஆதிகருமாபுரம் பொருள்தந்தகுலத்து குலகுறு வரலாறு:-
ஆதிகாலத்தில் பொருள்தந்தகுலத்தாருக்கு குலக்குரு உண்டன வரலாறு பற்றி ஆதிகருமாபுரத்தைச்சேர்ந்த பொருள்தந்தகுலத்து பழம்பெரும் முதியவர் சொன்ன செவிவழிச்செய்தி.
"சிதம்பரத்தில் ஒருஜயர்ருக்கு பதினாறு பையன்கள் அதில் ஒரு பையனை எங்கள் குலகுருவாக இருக்கும்படி கேட்டபோது பையனுக்கு எடைக்கு எடை பொருள்தந்தால் ஒரு பையனை உங்களுக்கு தாரை வார்த்துக்கொடுக்கிறேன் என்றூ சொன்னதன்படி நாங்கள் ஏற்றுக்கொண்டு தராசில் ஒருபக்கம் பையனை வைத்து மறுபக்கம் வெள்ளிபணம்வைத்து பையனை வாங்கி வந்து குருவுக்கான பட்டம்கொடுத்தோம்".
அந்தநாளில் குலகுரு ரெட்டைமாட்டுவண்டியை ஒரு ஆள் ஓட்டிவந்து பத்துநாள் தங்கியிருந்து வசூல்செய்து போவார். இப்படியிருக்கிறநாளில் ஒரு ஆசாமி குருவுக்கு பணம் கொடுக்கமுடியாதுனு சொல்லிவிட்டான் உடனே உனடவீடு நெருப்பிடித்து எரியகடவ என்று சாபம்மிட்டார். அடுத்தநாள் வீட்டில் நெருப்புபிடித்து நூறு மூட்டை கடலக்காயுடன் வெந்துபோனது. அடுத்தவருஷம் குலகுரு வரும்போது ஊர்பூரா அவனேமுன்னின்று வசூல்செய்து குலகுருவுக்கு கொடுத்து அனுப்பினார்.அப்போது நிங்கள் தத்தெடுத்துவந்ததால் நாங்கள் சாபமிட்டல் உடனேபழிக்கும் என்று சொன்னார்.இப்போது ஜயம்பாளையத்தில்தான் இருக்கிறார்.தானமாக 200ஏக்கர் பூமி கொடுத்தோம்.
பண்டைத்தமிழ்நாட்டில் பார்புகழ் நாலாறுநாட்டினில் பூன்துறைசைநாட்டின் துணைநாடாம் ஏழூர்நாட்டின் நல்லாட்சியர் காராளவம்ச வெள்ளாளர் பிறாழந்தைகுலத்தாரின் சிரந்தோர் காணியாட்சி வான்புகழ் கண்டு கோலாட்சி நடத்திவந்த வேளையில் ஏழூர் தேவதாசியிட்ட சாபகருமத்தில் விடுபட்டு குலம் தழைத்தோங்கிட ஏழூர் நாடாட்சி துறந்து காணிவிட்டு வெளியேறி செல்லாண்டியம்மன் அர்த்தானாரீஸ்வரர் செங்கோட்டுவேலவனார் அருள்பர்வையால் மலை அருகிலே காணிகண்டு சாப கருமம்தனை போக்கிட கருமாபுரமென்று புதுக்காணிக்கு பெயர்சூட்டி ஆதிகருமாபுரமென்று பெயரான இடந்தனில் பிறாழந்தைகுலம் அருகுபோல்வேரூன்றி ஆல்போல்தலைத்து வளர்ந்திட கோயில்கட்டி குலத்தெய்வமாய் வணங்கிவரும் செல்லாண்டியம்மன்தாயே! நாட்கள் செல்லசெல்ல வளர்ந்தபிள்ளைகளுக்கு வரன்கேட்ட இடந்தனில் நலம்பேசி வரன்தாரொமென்று சொன்னவர்களே பொருள்தந்தகுலத்தாரென்று உறவுகொள்ள செய்த திரிசூலநாயகியே! பரம்பொருள்ய் வந்து குலதெய்வமென காத்தருளும் செல்லாண்டியம்மனே! பரந்தெழுந்த சமனண்முதலாம் பரசமய இருள்நீங்க அருள்புரியும் இறைவியே! அங்கத்திலிங்க பிரதிஷ்டைசெய்து அனுஷ்டான விதிதனை முடித்து அங்காள்மங்கை மலரடி துதித்து குலதெய்வமாய் அவதாரமெடுத்தவளே! கங்கைநீரடி குலதெய்வத்தை துதித்தார் நல்வழிபெற வழிகாட்டுபவளே! சங்கரி கெளரி சாம்பவி மகாசக்தியான எங்கள் செல்லாண்டியம்மன்தாயே! சிங்கம் சிலிர்த்து நிற்கும் நீ குடிகொண்டிருக்கும் சிங்காரகோயில்வாசலிலே! யாணை அசைந்துநிற்கும் நீ அருளாட்சி புரிகின்ற ராஜாகோபுரமுன்வாசலிலே! கருணைபொலி்யும் குலதெய்வமே அண்டிவந்தோர்க்கு அருள்புரியும் தாயே! இருள்நிறைந்த வழித்தடத்தினில் இருபக்கமும் வழித்துணைக்கு வருபவளே! பொருள்தந்தகுலத்தினரின் குறைதனைப்போக்கி நிறைதந்து காப்பவளே! நாளும்பொழுதும் உனை வேண்டிவணங்கி வரும் பொருள்தந்தகுலமக்கள் வாழ்வுத்தேடி எங்குசென்று வாழ்ந்தாலும் அங்கு சீர்சிறப்போடு ஓங்குபுகழோடு வம்சம்பெருகி வாழ்ந்திட அருள்பாலித்து பாதுகாத்து வரும் அருள்மிகு செல்லாண்டியம்மன் தாயே! போற்றி! போற்றி!!!
சங்ககாலத்தில் நீர்வளம் கண்ட கொங்கர்:-
அன்றும் இன்றும் என்றும் மனிதன் உயிர்வாழ உணவுவேன்டும் அந்த உணவை கொடுபவர்கள் உழவர் பெரும்தகையாளர்கள் ஆவர்.அன்றைக்கு உணவுபொருட்களை உற்பத்தி செய்பவர்கள் அதாவது வெள்ளாமை செய்பவர்கள் என்ற கருத்தாழத்தில் வெள்ளார்கள் என்று அழைக்கப்பெற்று வந்தனர்.அந்த வெள்ளாளப்பெருமக்கள் தான் நிலத்திலுள்ள நீர் அதாரங்களை முதன்முதலில் கண்டறிந்து அதை வெளி கொணர்ந்து பன்படுத்தி உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்களாவர்கள்.
அன்றைக்கு "உண்பதும் உடுப்பதும் இன்றிகெடும்" என்றார் வள்ளுவர்.அன்றைக்கு உணவுக்கும் உடைக்கும் வேண்டுவனவெல்லாம் குறைவின்றி கிடைத்ததென்றால் அது கொங்குநாடு தான் .அதற்கு காரணம் மழைவளம் தப்பிய காலத்திலும் வளம்தப்பாத ஆழ்தகன்ற கிணறுகளைதோண்டி வேண்டியளவிற்கு கிணறுகள் பெற்றிருந்தது கொங்குநாடு ஆகும்.அதனால் தான் கிணற்று வளம் கொங்குநாட்டைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இல்லை என்பதற்கு
"கொங்கர்-கனைப்பொறி பிறப்ப நூறி வினைபடர்ந்து
கல்லுறத்தியற்றிய வல்லுவர்ப் படுவில்
பாருடை மருங்கின் ஊறல்..." அகம்-79
என்ற பாடல் நற்சான்றாகும்.
கிமு.இராண்டாம்நூற்றாண்டுக்கு முன்பும் சங்ககால்த்தில் கொங்குநாடு கிணற்றுவளம் பெற்று இருந்தது என்று கொங்குநாட்டு புலவர் குடவாயில் கீர்த்தானார் கூறியுள்ளார்.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கொன்கர் கிணறு வெட்ட மண்தோண்டும் போது பாறை தென்பட்டால் கடப்பாறையினால் குழிபோட்டு வெடிவைத்து பாறைகளை உடைத்து ஆழமான கிணறுகள் தோண்டியுள்ளார்கள் என்று நேரில் கண்டதைப் போல் பாடலில் கூறியுள்ளார்.கிணறு வெட்டி வெள்ளாண்மை செய்து வந்த வெள்ளாளர்களுக்கு உழவுத்தொழில் செய்ய ஆடுமடுகள் இன்றியமையாததாக இருந்தது.
வெள்ளாண்மைக்கு உரம் தேவை! உரத்திற்க்கு பட்டி தேவை!
பட்டிக்கு ஆடு தேவை! உழவுக்கு மாடு தேவை!
ஆகியவைகள் அவசியமானதாக இருந்ததோடு நல்லவருமானம் தருபவைகளாகவும் இருந்தது.அதனால் தான் காராளவம்சகுலமக்களை வாழ்த்தும் ஆன்றோர் சான்றோர் பெரியோர் பெருமக்கள்.
"பட்டி பெருகவேணும்! பாற்பாணை பொங்கவேணும்!
ஆடு மாடு பெருகவேணும்! வீடு பொழிய வேணும்!
காராளகுலவம்சம் தழைத்து விளங்கவேணும்!"
என்று வாழ்திவந்தார்கள்.
காராளவம்சகுலமக்கள் வெள்ளாண்மைத் தொழிலை செய்து வந்ததோடு ஆடுமடுகளையும் பட்டிபடியாக வளர்த்து வந்தார்கள்.அன்றைக்கு தமிழ்நாட்டிலுள்ள மக்கள் பெரும்பாலான கோயில்களில் நெய்தீபம் ஏற்றுவதற்க்கு நெய்கள் குடம் குடமாக கொங்குநாட்டிலிருந்துதான் பல இடங்களுக்கு ஏற்றுமதியாயின.
பூந்துறைநாடு சென்னிமலைமுருகன் திருக்கோயிலுக்கு நெய்தீபம் ஏற்ற பிடாரிலுள்ள பொருள்தந்தகுலத்தினரும் கூரைகுலத்தினரும் நெய் கொடுத்து வந்தர்கள்.தமிழகததிலுள்ள பெருந்தெய்வங்களுக்கு தேவைப்படும் நெய்கள் கொங்குநாட்டிலிருந்துதான் கிடைக்கப்பெற்றது. இன்றைக்கும் கூட ஊத்துகுழிநெய பிரபலமானதாகும்.மொளசியில் ஆட்சி புரிந்த ஆந்தைக்குலத்தினர் மொளசி காணியை விட்டு வெளியேறியதில் ஒருபிரிவினர் அங்கேயே தங்கி ஆந்தைகுலத்திலிருந்து பிரிந்து தங்களை புதியகுலத்தவராக நிலைநாட்டும் வகையில் பிறழாந்தை என்று பெயர்சூட்டிகொண்டனர்.மொளசி கண்ணன்குலகாங்கேயன் உதவியுடன் ஏழூர்நாட்டை ஆட்சிபெற்றமைக்காக பிறழாந்தைகுலத்தினர் திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரருக்கும் செங்கோட்டுவேலவனுக்கும் நெய்தீபம் ஏற்றினர். அதன் பின்ன்ர் அதே பிறழாத்தைகுலத்தினர் பல ஆன்டுகளுக்குபிறகு ஏழூர் காணியைவிட்டு வெளியேறி கருமாபுரத்தில் காணி பெற்றம்மைக்காக திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரருக்கும் செங்கோட்டுவேலவனுக்கும் நெய்தீபம் ஏற்றினர்.கருமாபுரத்தில் செல்லாண் டியம்மனுக்கு கோயில் கட்டி பிரதிஷ்டை செய்து நெய்திபம் போட்டு வ்ந்ததனால்தான் பல சொதனைகளை கடந்து பொருதந்த குலத்தவர்கள் என்று மங்கா புகழ்பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வருகிறார்கள்.
கீழ்கரை பூந்துறை நாட்டின் ஊர்தொகைப்பாடல்:-
"மோருடன் முழசை குலவு மேமப்பள்ளி முற்றுத்தகடப்பாடியும்
மோடமங்கல மெழிப்பள்ளியிருப்புலி பிரதிமுட்டில் சிறு முளசையணிமூர்
நீருர் குமரமங்கையகரஞ்செதாபுரம் நிழலுற்றகருமாபுரம்
நீதிவட்டூர் மணலி கோக்களையு முஞ்சினியும் நிலை கொள் கூத்தம்பூண்டியும்
சீருரமானங்கூர் கொக்கராயன் பேட்டை தேவை காட்டாசி நல்லுர்
செய மாவிரட்டியுடனே லத்திவாடியுஞ்செய்யபடை வீடுபட்லூர்
ஏரூர் வயற்கழனூர் மண்டபத்தூர் தோக்கையின்பமிக சித்தந்தூர்
இணையில் கத்தாரியுடன் முப்பத்திரண்டூர்களினிய பூந்துறை நாடே!"
ஊர்த்தொகைப் பாடலில் கூறியுள்ள ஊர்கள்:-
1. மோருர்
2. முளசை
3. ஏமப்பள்ளி
4. தடப்பட்டி
5. மோடமங்களம்
6. கோழிப்பள்ளி
7. இருப்புலி
8. பிரிதி
9. சிறுமுளசை
10. அணிமூர்
11. குமரமங்கலம்
12. அகரம்
13. சேதாபுரம்
14. கருமாபுரம்
15. வட்டூர்
16. மணலி
17. கோக்களை
18. உஞ்சனை
19. கூத்தம்பூண்டி
20. ஆனங்கூர்
21. கொக்கராயன்பேட்டை
22. தேவணாங்குறிச்சி
23. காடச்சி நல்லூர்
24. மாவிரட்டி
25. லத்திவாடி
26. படைவீடு
27. பட்டிலூர்
28. கழனூர்
29. மண்டபத்தூர்
30. தோக்கைவாடி
31. சித்தளந்தூர்
32. கத்தேரி
கொங்கு காணிப்பட்டயம்:-
கொங்கு வேளாளர்க்குலப் பெருமக்கள் சோழநாட்டிலிருந்து வெளியேறி கொங்கு நாட்டில் காணி,ஊர் இவைகள் ஏற்படுத்தி கொண்டதை கொங் காணிப்பட்டையம் விளக்குகிறது.சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் மதுக்கரை(கோட்டக்கரை) செல்லாண்டியம்மன் கோயிலுக்கு அருகில் தங்கள் எல்லைகளை சரிசெய்து கொள்ளவும் அவர்கள்து நீதி நெறி முறைகள் பற்றி கல்ந்து பேசவும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுரை மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயிலில் கூடுவது வழக்கம் அந்த வகையில் பட்டையம் ஒன்று தயாரிக்கப்பட்டது.அப்பட்டயத்தின் முதற்கன் கரிகாலச்சோழன் வரலாறு சுருக்கமாக கூறப்படுகிறது.
கரிகாலச்சோழனுக்குச் சித்தபிரமை ஏற்படவே கொங்கு நாட்டில் அணைகள் கட்டி கொங்கேழ் சிவதலங்களுக்குச்சென்று தரிசித்து வந்தால் பிரம்மை நீங்கும் என்று கூறியதற்கு திருக்கடையூர் வந்து குருவாகிய ஆண்ட சிவசுப்பரமணியக்குருக்களை வணங்கி அவரையும் அழைத்துகொண்டு சடையன் தலமையில் வேளாளர் பெருமக்களுடன் கொங்குநாடுச்சோழர் தல்மையில் அனைவரும் கொங்குநாட்டிற்கு வருகின்றன்ர்.அப்போது கம்பநாட்டார் குலங்கோத்திரம் பிரித்து கொங்குநாட்டுகு அனுப்புகிறார்.வேளாளர் 124 குலங்கள் கூறப்படுகி்ன்றன.குலங்களுக்குரிய காணி வகுக்கப்படுகின்றன.திருக்கடையுர் குருக்களை வணங்கி அவருக்கு பல ஊர்களை மானியமாக அளிக்கின்றனர்.கொங்கு 24 நாட்டுகும் குருக்கள் நியமிக்கப்படுகிம்றனர்.இப்பட்டயம் சோழன் பூர்வபட்டயத்தின் சுருக்கம் போல் தெரிகிரது.பக்கம் சுருக்கம் கருதி அப்பட்டயத்தில் உள்ள சில வரிகள் மட்டும் பிரசுரிக்கப்படுகின்றன.
".....................................கலியுக சகாப்தம் 3409மேல் செல்லாநின்ற ரவுத்திரி வருஷம் சித்திரை மாதம் 21ம்ந்தேதி சுக்கரவாரம் பஞ்சமியும் திருவோண நட்சத்திரம் பாலவாக்ரணமும் சித்த நாமயோகமும் பெற்ற சுபதினத்தில் சேரன்,சோழன்,பாண்டியன் மூவராஜ்களும் மூன்று பிரிவாகச் சீமையாண்டு வருகிற விபரம்............................" "சோழ நாட்டிலிலுள்ள் குடிகள் வேளாளர் தொண்டை மண்டலம் வெளாளர் முதலிபேர்களும் தீக்ஷை திருமுடி பெற்றுகொண்டு கொங்கேழு சிவலாயமும் சேவித்து மேல் சிதம்பரம் சேவித்து சோழன் துறையென்றும் காஞ்சிமாநாதிக்கு 32 அணையும் கட்டிவைத்து சிவபிரதிஷ்டை அக்கிரகாரங்களும் ஆலயங்கள் சீர்நோத்தாராங்கள் வாவி சுபம் தடாகங்கள் செய்விது ராஜாக்கள் நீதாம் யென்று கட்டி வைத்து அதில் குடிகளுடன் கோட்டையும் கட்டி அதிகாரம் செலுத்திவந்து குலத்தெய்வமாகிய சோழீஸ்வரரையும் காலகாலலேஸ்வரரையும் அர்சித்தால் ராஜாவுக்கு சித்த பிரமை நிங்கி பரதேசியால் வந்த சாபம் விமோசனம் ஆகும்.......................................குருவுக்கு தாரை வார்த்து குடுத்தபின் கொங்குதேசத்துகு சுவாமி குருவுடன் வரும் பொது காவேரி கடன் கம்பநாட்டான் மரித்து குலகோத்திரங்கள் அறியாமல் கொங்கில் விடமாட்டோம்யொன்றார்கள். ஒரு முகூர்த்தங்க்குள்ளாக குலங்கோத்திரப்பிரிவுகளும் கவுண்டப்பட்டங்களும் செய்து காட்டினால் ஒப்புகொள்ளவோம் இல்லாவிட்டால் வந்தவழியே தொண்டை மண்ட்லம் போய்ச் சேருங்கள்யென்று சொன்னார்கள்...................................கம்பர் குலக்கோத்திரங்கள் பிரிவுசெய்தவிபரம் .கவி.சேரன்,பாண்டி,பனகன்,செங்கோன்,பெரியன்,செம்பன்,பவழன்,தூரன்,ஆந்தை,காடைகுலம்,........................................ஓதாளன் பாரம்சுமந்த பண்ணகுலம்,படியந்துண்ணும் பயிரகுலம்,தோடன்,வேந்தன்,தேவேந்திரன்,கூரை,பொன்னான் கொங்கினரே............................"
என்ற பட்டயவரிகள்மூலம் கொங்கு கீழ்கரைபூந்துரைநாடு மொளசியை ஆண்டு வந்த ஆந்தைகுலத்தினர் பின்னாளில் கண்ணன்குலக்காங்கேயன் ஆட்சிக்கு உட்பட்டபோது ஆந்தைகுலத்தினர் மொசியை விட்டு வெளியேறினர்.அப்போது அவர்களில் ஒரு பிரிவினர் அக்கேயே தங்கி நிலைபெற்று ஆந்தையிலிருந்து பிரிந்தவர்கள் என்று நிலைநாட்டும் வகையில் பிறழாந்த என்று தங்களை அறிவிதுக்கொண்டனர்.பின்னாளில் இந்த பிறழாந்தை குலத்தினர்தான் ஏழூர் நாட்டை ஆண்டு வந்தனர்.
ஏழூ நாடு ஆட்சியாளர் பிறழாந்தைகுலத்தினர்:-
ஆதியில் கீழ்கரை பூந்துரை நாட்டின் துணைநாடான ஏழூர் நாட்டை ஆண்டு வந்த பொருள்தந்த குலத்தினர் சீரோடும்,சிறப்போடும் காணியாட்சி நடத்தி வந்தனர்.ஏழூரில் ஆடலும்,பாடலும் மூலம் பிரசித்திப் பெற்று கற்பூர ஆய்,கற்பூரிவள்ளி என்னும் இரு தேவதாசிசகோதரிகள் செல்வசெழிப்புடன் வாழ்ந்து வந்தனர்.அவர்களுக்கு சந்ததியில்லை.அதனர் அவர்கள் "பலஉயிர்கள் வளர்ச்சிபிழைப்பு மார்க்கமுள்ள உபகாரமான நிலையான தருகருமத்தைச் செய்தால் புகழ் புண்ணியம் உண்டாம்"
என்று ஆன்றோர் சொன்ன வாக்குக்கேற்ப ஒருஏரியை கட்டினால் நீர்நிரம்பும்.அதனால் புஞ்சை நஞ்சை நிலமாகி உற்பத்திபெருகி ஊர்செழிக்கும் பலகுடித்தனங்களுக்கு தொழில்வாய்ப்பு ஏற்படும். பல பிராணிகள் உண்டு குடித்து பிழைக்கும் என்று எண்ணி தீர்மாணித்த சகோதிரிகள் எல்லாம் தங்களிடம் உள்ள பொருள்களை எல்லாம் நல்லெண்ணத்துடன் ஏரிவெட்ட ஒட்டர்களிடம் கொடுத்தனர்.ஏரி வேலை முடிந்தது.ஏரியை வெட்டிய ஒட்டர்களுக்கு கொஞ்சப்பணம் பாக்கியை ஆடல் பாடல் கொண்டதேவதாசிச்சகோதரிகள் கொடுக்க வேண்டி இருந்தது அந்த கொஞ்சம் பண்த்தை கேட்டு ஒட்டன் நச்சரிக்க அதற்கு இருசகோதிரிகள் யாராவது கடன் கொடுத்தால் சீக்கிரம் கொடுத்து விடுகிறோம் அதுவரை கொஞ்சம் பொருத்து இருங்கள் என்று மனமிரங்கி வேண்டி கேட்டுக்கொண்டனர்.யாரும் கடன் கொடுக்கவில்லை.தேவதாசிப்பெண்கள் என்று நினைத்து தானே யாரும் பணம் கொடுக்கவில்லை என்று நினைத்து மிகவும் மனம் வருந்தி கலங்கி நின்றனர்.கடைசியாக காணியாட்சி கவுண்டர்களிடம் சென்று நிலைமையை எடுத்துகூறி கடன் கேட்டனர்.அப்பொது இவர்களுக்கு யாரும் கடன் கொடுக்காதபொது நாம் கடன் கொடுத்தால் நம் புகழுக்கும்,நடத்தைக்கும் களங்கம் க்ற்பித்து விடுவார்களோ? என்று அஞ்சி கடன் கொடுக்க மறுத்து விடுகின்றனர்.மற்றவர்களிடம் கடன் கொடுக்கும் நிலை இருந்ததோ இல்லையோ ஆனால் காணியாட்சியாளர்கள் கடன் கொடுக்கும் சூழல் இருந்தும் கொடுக்காதது கண்டு இருச்சகோதரிகளும் மனம் வெதும்பினர்.நாளை ஒட்டர் வந்து பணம் கேட்டு மானத்தை இழப்பதை விட பிராணத்தை இழப்பதே மேல் எனத்துணிந்தார்கள்.அன்று இரவு நல்ல மழை பெய்தது.
"சிலர் தொடங்கும் கருமம் முற்றுப் பெறாமல் பொவதுண்டு!
சிலர் தொடங்கும் கருமம் கடவுளின் சகாயத்தால் முற்றுப்பெறும்!"
அடுத்தநாள் ஏரியில் நீர் நிரம்பியது ஏரிக்கு சென்றுபார்த்த இருசகோதரிகள் நீர் நிரம்பியது கண்டு சந்தோஷமடைந்தனர்.நாம் எந்த நோக்கத்திற்காக ஏரிவெட்டினோமோ அந்த நோக்கம் நிறைவேறிவிட்டது.இனி நாம் இந்த ஏரி நீரில் விழுந்து மூழ்கிவிடுவோம் என இருவரும் பேசி முடிவு செய்து இருவரும் தலைமேலே கை குவித்து கொண்டு இருகண்களையும் மூடிக்கொண்டு சற்று நேரம் ஈசுரத்தியானம் செய்து நின்றார்கள்.அப்போது மூத்த சகோதரி கண்விழித்து ஏழுர் நாட்டு காணியாட்சியாளர்களை தருமகருமத்திஅற்கு உதவாதவர்கள் என்று மனதாள் சபித்து
"எங்கெங்கும் மழைபொழிந்து செழிக்க்ட்டும்!
ஏரியில் நீர் நிரம்பி பலர் பயன் பொறட்டும்!
ஏழுர் காணியாட்சியர் கருவருத்துப் போகட்டும்!
வந்த குடி வளரட்டும் இருந்த குடி மருவட்டும்!"
என்று சாபமிட்டு விட்டு இளைய சகோதரியை கைகளில் கோர்த்து கொண்டு ஏரியில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டனர்.அப்போது துரத்தில் இவர்களை பார்க்க வந்து கொண்டு இருந்த ஒட்டன் ஓடிவந்து இந்த ஏரியை வெட்ட எவ்வளவோ பணம் கொடுத்தீர்கள்.கொஞ்ச பணத்தை நீங்கள் எப்போது கொடுக்க முடியுமோ அப்போது கொடுங்கள் என்று சொல்லத்தானே வந்தேன்.அதற்குள் இவ்வாறு செய்து விட்டீர்களே! தருமகாரியம் செய்த நீங்கள் என்னால் உயிரை மாய்த்து கொண்டார்கள் என்று நாளை ஊரார் பேசுவார்களே இனி நானும் இக்குளத்தில் விழுந்து மாண்டு போவதே மேல் என்று சொல்லி ஒட்டனும் குளத்தில் குதித்து உயிர் துறக்கிறான்.அவனுடன் வந்த நாயும் அவனுடன் குளத்தில் குதித்து மாண்டு போகிறது.பின்னாளில் ஊரார்கள் அந்த நான்கு உருவங்களுக்கும் கல்லில் அடித்து அந்த ஏரிக்கரையில் நட்டு வைத்தார்கள்.இன்றும் அந்த நாட்டிருக்கும் கல் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
கருமாபுரத்தில் பொருள்தந்தகுலத்தினர்காணிபெற்ற வரலாறு:-
ஏழுர் நாட்டை ஆண்ட பிறழாந்தைகுலத்தினர் (பொருள்தந்த‘குலத்தினர்) ஏழுர் அண்ணன்மார் சுவாமிகோயில், கட்டியண்ணன்கோயிலில் காணியுரிமையுடையவராவார்கள். குறுந்லமன்னன் கட்டியண்ணன் நினைவாக கட்டியண்ணன் கோயில் கட்டபெற்றது. " கட்டி மகீபன் பள்ளு" என்னும் இலக்கியம் கட்டி மகீபன் பெருமையை எடுத்துக்கூறுவதாகும். ஏழுரில் காணியாட்சியாளர்கள் பொருள்தந்த குலத்தினர் என்பதற்கு பழனிவேலகவுண்டன் மகன் கட்டிக்கவுண்டன் வரலாறே ஒரு ஆதாரமாகும்.
ஏழூரில் தேவதாசிப்பெண்கள் புதியதாக கட்டியஏரியில் நான்கு உயிர்கள் மாண்டுபோன செய்ததையும்,மூத்த சகோதரி தங்கள் குலத்தினரைசபித்து சாபமிட்டுவிட்டு இறந்த செய்தியும் ஏழூரில் காணி்யாட்சியாளராய் இருந்து வந்த பிறாழந்தைகுலத்தினருக்கு அடிமனதை வருடி ஆழமாய் பதிந்தது. ஊராரின் பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஆளாகக் கூடாது என்று பயந்து தானே நாம் செய்யதவறிய தருமகரும் காரியத்தால் இன்று இவ்வாறான கொடிய பாவத்திற்கும்,சாபத்திற்கும் ஆளாகவோண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டதென நினைத்து இனி இந்த ஏழூரில் இருந்தால் நம் காராளவம்சத்து பிறழாந்தைகுலம் தேவதாசிப்பெண்களின் மூத்தசகோதரி சாபத்திற்கு ஆளாகி அழிவையும் சரிவையும் எதிர்கொள்ள வோண்டிவரும்.ஆகவே இனி இந்த காணியை விட்டு வெளியேறி வேறு காணியை தேடிசெல்வதே இந்த சாப கருமத்திர்கு பரிகாரமாகும் என்று நினைத்து ஏழூர் காணியாட்சியளர்களான பிறழாந்தைகுலத்தினர் நிலம் ,வீடு, மற்றும் விளையும் பொருள்களை இழந்துவிட்டு ஏழர் காணியாட்சியளார் என்ற பெயரை துறந்துவிட்டு தங்கள் பண்டம்பாடிகளைகளோடு ஏழூரை விட்டு வெளியேறி செல்வதென்று முடுவெடுத்தனர். இனி நாங்கள் செல்லும் புது இடத்தில் எங்கள் குலம் தழைத்தோங்கி வளர்ந்து பெருகவென்டும் என்று காராளவச ஆதிகுலதெய்வமான மாயானூர்செல்லாண்டியம்மனை வேண்டிவணங்கினர். வடக்குவாழம் என்ற பொன்மொழிக்கேற்ப வடமேற்குதிசை நோக்கி காராம்பசு செல்லும் வழித்தடத்தை பின்தொடர்ந்து பண்ட்ம்பாடிகளை ஒட்டிக் கொண்டு சென்ற்னர்.காராம்பசு செங்குன்றத்துமலையருகே வந்தபோது பொருள்தந்தகுலத்தினர் அர்த்தனாரீஸ்வரர் ,செங்கோட்டுவேலவனை வேண்டி நீங்கள் அருளாட்சிபுரிக்ன்ற செங்குன்றத்தக்கருகிலேயே எங்களுக்கோர் நல்லக்காணியை ஏற்படுத்திதரவேண்டும் என்று வணங்கிச் சென்றனர்.வடக்குநோக்கி சென்ற காராம்பசு ஓரிடத்தில் படுத்துக்கொண்டது. பிறழாந்தைகுலத்தினர் இதுதான் நம் காணியென நினைத்து பண்டம்பாடிகளுக்கு அங்கேயே பட்டியமைத்து குடிகொண்டு நிலைப்பெற்றனர். பின்னர் சுற்றியுள்ள வனங்களை அழிந்து கழனியாக்கி வெள்ளாண்மை செய்து வரலாயினார்.நாளுக்குநாள் வெள்ளாண்மை செழித்து வம்சம் பெருகி குலம் தழைத்தோங்கி வருவதைகண்டு இதற்கெல்லாம் நாம் வேண்டிவணங்கிய அந்த மாயனூர்(மதுக்கரை) செல்லாண்டியம்மன் அனுக்கிரஹமேயாகும் என்று எண்ணி செல்லாண்டியம்மனுக்கு அங்கு கோயில் எழுப்பி குலதெய்வமாய் பிரஷ்டைசெய்து வணங்கிவழிப்பட்டு சிறப்புபெற்று வாழ்ந்து வரலாயினர்.
ஏழூரில் இருதேவதாசிப்பெண்கள் தருமகரும ஏழூர் காணியை விட்டு பெயர்,பொள்களை இழந்த்துவிட்டு வரவேண்டிய துர்ப்பாக்கியநிலை ஆகிவிட்டது.அக்கருமபாதிப்பு என்றைக்கும் மனதில் வடிவாய் நிலைத்து நினைவுகூறும் வகையில் புதுக்காணிக்கு "கருமாபுரம்" என்ற பெயர் நாமம் சூட்டி மற்றகுத்தினரால் பொருள்தந்தகுலத்தினர் என்று பெருமையோடு அழைக்கப்பெற்று வாழ்ந்து வரலாயினர்.
கருமாபுரம்காணி பெருள்தந்தகுலத்தினர் பலகாலகட்டங்களில் வரட்சியின் காரணமாகவும்,வேட்டையாடச்சென்றதின் காராணமாகவும் சிலர் கருமாபுரம்காணியைவிட்டு வெளியேற்ச்சென்று காடையூர், தோட்டக்குற்ச்சி, பிடரியூர், மேல்ஓரத்தை், ஆலாம்பட்டி, ஆறுத்தொழுவு, மாவுரெட்டிபட்டி, மத்தூர், துராம்பாடி, பிள்ளைகரை, ஈஞ்சம்பள்ளி, மாம்பூண்டி, கருர், கொங்கணபுரம்,
பெருமாநல்லூர், தலையூர், புன்னம், பவுத்திரம், பரமத்தி, ஆதியூர், சேமூர், உறையூர், விஜயமங்களம், அமுக்கியம், திங்களூர், குன்னத்தூர், நாட்டாமங்களம், கலியாணி, நவனி, வைகுந்தம், தோளூர், பழனி, மதுரை,இருக்காலூர் உட்பட 35 ஊர்களைப் காணி பெற்றனர்.
பெருள்தந்தகுலம் என்னும் பெயர்பெற்ற வரலாறு:-
கருமாபுரத்தில் காணி பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வந்த பெருள்தந்தகுலத்து வம்சங்கள் நாளுக்குநாள் பெருகி வந்தபோது தங்கள் குலத்து ஆண்பிள்ளைகளுக்கு பெண்கேட்டும்,பெண்பிள்ளைகளுக்கு மாப்பிள்ளை கேட்டும் அக்கம்பக்கத்து மற்றகுலத்தார்களிடம் சென்று கேட்டபோது மாமன்,மைத்துனர் என்ற உறவு முறைகாரணமாக ஏழூர் காணியாட்சியளர் என்ற பெயரை இழந்து ஏழூர் காணியிளுள்ள பூமி,வீடு,பெருள்களை இழந்து வந்த நீங்கள் பெயரிழந்தகூட்டம்,பொருள்யிழந்த கூட்டாமாச்சே உங்களுக்கு யார் பெண் கொடுப்பார்கள்,பெண்கட்டுவார்கள் என்று கேலிநக்கலாக,ஏளனமாக பேசியதைக் கேட்ட பிறழாந்தைகுலத்தினர் கருமாபுரம் செல்லாண்டியம்மன் கோயிலில் அனைவரும் கூடிநாம் எத்தனையே பேர்களுக்கு பெருள்தந்து இருக்கிறோம்.ஏழூரில் பெயருக்கும்,நாடத்தைக்கும் களங்கம்வரக் கூடதுயென்று பயந்துதானே அந்த தாசிகளின் தருமகாரியத்திற்கு பொருளுதவி செய்யவில்லை.இவ்வாறு இருக்கும் பட்சத்தில் நம்மை பொருள் இழந்த கூட்டம் என்று பேசுகிறார்களே!ஏசுகிறார்களே! என்று மனம்வருந்தி
"தாயே!செல்லாண்டியம்மா! இதற்கு நீதானம்மா ஒருவழி காட்டவேட்ணூம்!" என்று அனைவரும் வேண்டி வணங்கி அப்போது செல்லாண்டியம்மன் ஒரு சிறுமி சிரசுமேல் ஏறி,
"என்னை வோண்டி வணங்கி நிற்கும் குலமக்களே! பொருளுக்கும், பெயருக்கும் பேர்பெற்றவர்கள் நீங்கள் ! இனி நீங்கள் பேரும், பொருளும் இழந்தவர்களல்ல ! பொருள்களை அள்ளி அள்ளி தருங்கின்றவர்கள் ! இனி ஏங்கள் பெண்ணை கட்டுவர்களுக்கு இன்னன்ன பொருள் தருவோம் என்று கூறுவீர்களேயானால் உங்கள் பெண்ணை கட்ட நான் நீ என்று போட்டிபோட்டு அக்கம்பக்கத்து குலத்தவர்கள் வருவார்கள் அப்போது நீங்கள் பொருள்தந்த குலத்தவர்கள் என்று பேசி அழைக்கப்படுவீர்கள்" என்று அருள்வாக்கு சொல்லிவ்விட்டு சொல்லாண்டியம்மன் சிறுமி சிரசுலிருந்து மலைஏறியது.சொல்லாண்டியம்மன் சொன்ன அருள்வாக்குபடி கடைப்பிடித்து வந்தனர்.அதன்பிறகு மற்றகுலத்தினர் இவர்கள் குலத்தில் பெண்எடுத்து பெண்கொடுக்க வரலாயினர்.அன்று முதல் பொருள்தந்தகுலத்தினர் என்று பெயர் பெற்று பார்புகழோங்கி சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வரலாயினர்.ஏழூர் பிறழாந்தைகுலத்தினர் கருமாபுரம் பொருள்தந்தகுலத்தினர் என்று பெயர் பெற்று வாழ்ந்து வந்தாலும் இவர்கள்
"பிறழாந்தைகுலாத்தாரென்கின்ற பொருள்தந்தகுலத்தார்கள்
புகழ்ச்சிக்கு மயங்குபவர்கள் ! இகழ்ச்சிக்கு பயப்படுபவர்கள் !"
இதுவே இவர்களின் வெற்றிக்கும் விழ்ச்சிக்கும் காரணமாகும்.இவர்கள் புகழ்ந்துபேசும் பேச்சுகளில் மயங்கி இவர்களின் உரிமைகளையும், உடைமைகளையும் இழந்துள்ளனர் என்பதற்கு அன்றுமுதல் இன்றுவரை பலநிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன.
பொருள்தந்த குலத்தினரின் காணிப்பாடல்:-
ஏழூர்நாட்டை சீரோடும் சிறபோடும் ஆட்சிபுரிந்து வந்த பிறழாந்தைகுலத்தினர் தேவதாசிப்பெண்களின் தத்ருமகரும்சாபத்திற்கு பயந்து நாடு காணிதுறந்து காணியாட்சியாளர் என்ற பெயரும் துறந்து பூமிவீடு பொருள்களையும் இழந்து காணிவிட்டு வெளியேரி காராளவம்சத்தின் ஆதிகுலத்தெய்வம் மாயானூர் செல்லாணாடியம்மன் வேண்டி வணங்கி வந்ததன் பலனாகவும் அர்த்தனாரீஸ்வரர் செங்கோட்டுவேலவன் அருளாசியாலும் செங்குன்ற (திருச்செங்கோடு) மலையருகில் காணிப்பெற்றனர்.தருமகருமத்தால் காணிவிட்டுகாணி பெற்ற காணிக்கு காருமாபுரம் என்று பெயரிட்டு பெண் கொடுத்து பொருள்தந்தனால் பொருள்தந்தகுலத்தினர் எனப் பெற்று அழைத்து வரலாயினர்.பின்னர் மழைபெய்யாமல் வறட்சி ஏற்பட்டு பஞ்சத்தினால் பொருள்தந்தகுலத்தினர் கருமாபுரம் காணியைவிட்டு பலவாறு பலபக்கம் சென்று காணி பெற்றனர் அவ்வாறு பொருள்தந்தகுலத்தினர் காணிப்பெற்ற ஊர்களைப் பற்றி இருக்காணிப்பாடல்களில் கூறியுள்ளன.
பொருள்தந்தகுலத்தினரின் முதல்காணிப்பாதல்:-
"ஆதிகருமாபுரம் காடையூர் தென்பழனை ஆதியூர் விஜயமங்கை அமுக்கியம் பரமுத்திபுன்னமது தோடயம் ஆலாம்பாடி ஆறை ஏழூர் சோதிபுரம் கொங்கணாபுரம் வஞ்சி முத்தூரும் சொக்கர்வாழ் மதுரை உறையூர் சுயமான நல்லூர் பிடாரியூர் மாம்முண்டி, சொற்பொருளின் மாவுரெட்டி தாதுலவு இடமானேமி சேமூருடன் தலையூர் நல்தூர பாடி தமிழ் பெற்றப்பிள்ளைக்கரைக்கதிபதிராக வளர்தார் பெற்ற கொங்குவேளீர் நீதியுள்ள மன்னவர்கள் சிற்றம்பலத்தாரை நினைக்கின்ற கங்கை குலமகன் நேர்மையது தவறாது பொருள்தந்த கோத்திரர் நிலையுடன் வாழ்க நன்றே!"
முதல்காணிப்பாடலில் ஊர்கள்:-
1. கருமாபுரம்
2. காடையூர்
3. பெருமாநல்லூர்
4. ஆதியூர்
5. விஜயமங்கலம்
6. அமுக்கியம்
7. பரமுத்தி
8. புன்னம்
9. தோட்டக்குறிச்சி
10. ஆலாம்பாடி
11. ஆறுதொழுவு
12. ஏழூர்
13. கொங்கணாபுரம்
14. கரூர்
15. முத்தூர்
16. மதுரை
17. உறையூர்
18. நல்லூர்
19. பிடாரியூர்
20. மாம்முண்டி
21. மாவுரெட்டி
22. சேவூர்
23. தலையூர்
24. தூரம்பாடி
25. பிள்ளைக்கரை
பொருள்தந்தகுலத்தாரின் இரண்டாம் காணிப்பாடல்:-
"திருமரபு கருமாபுரம் காடையூர் மதுரை திங்களூர் ஆதியீரும்
திறமான குன்னத்தூர் முத்தூர் அமுக்கியம் ஜெயவிஜயமங்கை
திருவுலவு புன்னம் பவுத்திரம் தோழூர் தழைத்த ஆலாம்பாடியும்
தாதவிழ் மலர்ந்த பஞ்சளை மாவிரட்டியூர் திருபெருமா நல்லூருடன்
கருதரிய பழனியும் பிடாயூர் பரமுத்தி காணியெனவே படைத்தாய்
கமலமலர் அருள்வதன் சென்னியங்கிரிமுருகர் கழணைய மறவாதவர்
பொருமைபெரு பொருளந்தை குலதிலகனென விபேகன் குழந்தைவேலன்
பெற்ற கண்மணியான பழனிமழைநாயகன் பிரபுடிக மகராயனே !"
என்று கூரும் இரண்டாவது காணிப்பாடலில் மேலும் ஜந்து காணியூர்கள் கூறப்பாடத ஜந்து ஊர்களும் சேர்த்து,
1. திங்களூர்,
2. குன்னத்தூர்,
3. பவுத்திரம்,
4. தோழூர்,
5. பழனி,
6. ஈஞ்சம்பள்ளி,
7. மேல் ஓரத்தை,
8. மண்ணறை,
9. திருப்பூர்,
10. அக்காலியூர் ஆகிய 10 ஊர்களோடு 35 காணியூர்களாகும்.
கருமாபுரம் செல்லாண்டியம்மனை குலத்தெய்வமாக வணங்கி வாழ்ந்து வந்த பொருள்தந்தகுலத்தினர் வறட்சிகாலத்தில் பண்டம்பாடிகளுக்கு தீவனத் தேவைக்காக காணிவிட்டு வெயேறிச்சென்றனர்.இதனால் கருமாபுரம் செல்லாண்டியம்மன்கோயிலைச் சுற்றியுள்ள பூமிகள் வெறிச்சோடிக் கிடந்ததால் மற்றவர்கள் அப்பூமியில் குடியேறிக்கொண்டனர். இன்றைக்கும் கருமாபுரம் செல்லாண்டியம்மன்கோயில் காணியாளர் பொருள்தந்த குலத்தினர் சற்று தள்ளி தொலைவில்தான் உள்ளனர். அதனால் கோயிலில் சுவாமிக்கு தினமும் பூஜை செய்ய பண்டாரத்தை பணிநியமித்தம் செய்து கோயில் பூஜை தவறாமல் நடத்தி வரச் செய்தனர்.இதணால் துரத்திலிருந்து வரும் காணியாளர் பொருள்தந்தகுலத்தினர் தங்குதடையின்றி குலதெய்வத்தை தரிசனம் செய்து வணங்கி வேண்டிச்செல்ல வழிவகை ஏற்பட்டது. காராளவம்சவெள்ளாக் கவுண்டர்கள் பெரும்பாலான குல தெய்வக்கோயில்களில் பூஜை செய்ய பண்டராங்களைநம்பி பணிநியமித்தம் செய்துள்ளனர்.இது வாழையடிவாழையாக இருந்து வருகிறது. பண்டராங்கள் வெள்ளாக்கவுண்டர்களின் குலத்தெய்வக் கோயில் பூஜை செய்வதற்கு மட்டுமே சுதந்திரம் பெற்றவர்கள் ஆவர். சில கோயில்களில் காணியாளர் குடிபாட்டுக் குலமக்களும் பூஜை செய்து வருகிறர்கள்.வெள்ளாக் கவுண்டர் குலத்தெய்வக்கோயில் முழுக்கமுழுக்க அக்கோயிலைச் சேர்ந்த காணியாளக் குடிபாட்டுக் குலமக்களே உரிமையுடையவர்கள் ஆவார்கள். ஒரு குலதெய்வக்கோயிலைச் சேர்ந்த காணிக்குடிபாட்டு குலம்மக்களுக்கு அடுத்த குலத்தெய்வக்கோயிலில் எவ்வித உரிமையும் கிடையாது. அவர்கள் உறவினர் என்ற முறையில் வந்து வணங்கி விருந்து உண்டுச்செல்லலாம். இது காராளவம்சவெள்ளாக்கவுண்டர்களின் அனைத்துகுலதெய்வக் கோயில்களில் நடைமுறையில் இருந்து வருகின்ற பாரம்பரிய கலாச்சார பழக்கவழக்க முறைகளாகும்.ஆனால் சில தவிர்க்கமுடியாத காரணங்களால் பெண் கொடுத்த வகையில் பிறகுலதெய்வக்கோயிலுக்குரிய குலக்காணியாளருக்கு காணியுர்மை, கோயில் உரிமை கொடுத்த வழக்கம் உண்டு.அந்த வகையில் பொருள்தந்தகுலத்தைச் செர்ந்த வெள்ளாப் பெண்னைக் கட்டியவகையில் காணியும் கோயில் முறைமையும் பெற்ற வரலாறு உண்டு.அதேபோல் கருமாபுரம் காணியைச்சேர்ந்த பொருள்தந்த குலத்தினர் ஈங்கூரில் ஈஞ்சன் குலத்தில் பெண் எடுத்து சம்மந்திகளாகி ஈங்குரில் பாதி காணியுரிமையாக பிடாரியூரைப் பெற்றனர். பின்னாளில் இவர்களில் ஒருபிரிவினர் கோபிகள்ளிப்ப்ட்டியில் குடியேறினர். கருமாபுரக்காணி பொருள்தந்தகுலத்தினர் முத்தூரில் காணிப்பெற்று ஜந்தாவது காணியாளராயினர்.அதேபோல் கரூர் தோட்டக்குறிச்சியில் வேட்டையாடச்சென்றபோது வேடவர்களுடன் போரிட்டு வென்று தோட்டக்குறிச்சியில் காணிப்பெற்று மலையம்மனை குலதெய்வமாக வணங்கி வருகிறார்கள் இவர்களில் ஒருபிரிவினர் மேல்ஓரத்தையில் அண்ணன்மார் சுவாமிக்கு கோயில் எழுப்பி குலதெய்வமாக வணங்கி வருகறார்கள்.ஆலம்பாடியில் காணிபெற்று அண்ணன்மார்சுவாமிக்கு கோயில் எழுப்பி குலதெய்வமாக பொருள்தந்தகுலத்தினர் வணங்கி வருகிறார்கள். ஈரோடு வட்டம் ஈஞ்சம்பள்ளி கீரமடையில் காணிப்பெற்று பொருள்தந்தகுலத்தினர் வேலத்தாளை குலதெய்வமாக வணங்கி வருகின்றனர். ஆறுத்தொழுவில் காணிபெற்று காளியம்மனை குலதெய்வமாக வணங்கி வருகின்றார்கள். ஆக பொருள்தந்தகுலத்தினர் எங்கு சென்று காணிபெற்று அங்கு கோயில் எழுப்பி வெவ்வேறு பெயரில் குலதெய்வங்களுக்கு பெயர்சூட்டி வணங்கி வாழ்ந்துவந்தாழும் அவர்களின் ஆதிகாணி கருமாபுரம் தான் என்பது வரலாற்று ஆண்வாளர்களின் கருத்து.
ஆதிகருமாபுரம் செல்லாண்டியம்மன்திருக்கோயில் காணி பொருள்தந்தகுலத்தைப்பற்றி செப்பேடு மற்றும் ஆவணச்செய்திகள்:-
1. பொருள்தந்த கோத்திரபுலவர்சேப்பேடு-கொங்குநாட்டுச்சமுதாய ஆவணங்கள். பக்கம் 110இல் கடைசிவரியில்
"கருமபுரம் செல்லாண்டியம்மன், பெருமாள், கொங்கணாபுரம் செல்லஅம்மன், ஏழூறு பண்ணைஅம்மன், தேசிநாயணன், பிள்ளை குலத்து செல்லாண்டியம்மன், எரணாபுரம் பெருமாள், மாறிஅம்மன்துணைசறுவலோக தேவாதிகள் துணை. கருமாபுரம் பொருளந்தை கோத்திரத்து பட்டையம்" பக்கம் 111இல் கடைசி வரியில் கடைசி.
"கருமாபுரம் அவரது காங்கயருங்கூடி கருமாபுரம் நல்லாக்கவுண்டன் குமாரன் முதலிக்கவுண்டன் தீத்தாப் பெருமகன் பொன்னாலி புலவனுக்கு கருமாபுரம் பொருளந்தை குல மெச்சனெனப் பேருங்குடுத்து ......"
2. கீழ்கரைப்பூந்துறை நாட்டுப்பட்டயம் – கொங்குநாட்டு சமுதாய ஆவணங்கள் - பக்கம்-119. கடைசிபத்தியில் திருஞ்சங்கோடு அர்த்தனாரீஸ்வரருக்கும் சுப்பிரமணியருக்கும் கார்த்திகை அன்று உச்சி கால கட்டளை ஏற்று நடத்த கீழ்க்க்ரைபூந்துறை நாட்டிலிலுள்ள 32 ஊர்களில் 18 ஊர்களிலுள்ள காணியாளக்கவுண்டர்கள், நாட்டுகவுண்டர்கள்,மற்றகவுண்டர்கள் , குடியானவர்கள், அக்கிரகாரத்தார்,கணக்குபிள்ளைகள், ஓபளிபாரு பத்தியக்காரர்கள் அனைவரும் ஒன்று கூடி கிரமாம் ஒன்றுக்கு 6பொன் 5பணம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டதை 1734 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ந்தேதியன்று சிவராம ஆசாரி அவர்கள் எழுதிய பட்டயத்தில் கூறியிருப்பதாவது.
"ஸ்வஸ்திஸ்ரீசாலிவாகன சகப்தாம் 1656 மேல் செல்லாநின்ற ஆனந்த வருஷம் தை மாதம் இரண்டாம் தேதி ஸ்ரீமத் ஆத்திரேய கோத்திரம் மைசூர் சிங்கா சானதீசுர மகா-ள-ள-ஸ்ரீ கிருஷ்ணராஜ துர்க்காதி பத்தியம் ராஜஸ்ரீ சஞ்சி வேட்டத்து ராஜாவையானவர்கள் அப்பனை படிக்கும் காரணிகாரர் சம்மதப்படிக்கு கீழ்கரை பூந்துரை நாட்டில் மோரூர், தகசப்பாடி, மணலி, ஆனங்கூர், குமாரமங்கலம், படைவீடு, கூத்தம்பூண்டி, கத்தாரி, சித்தளந்தூர், பள்ளிப்பாளையம், இருப்புலி, காவல் குறிச்சி , கருமாபுரம், மோடமங்கலம், வட்டூர், தேவணாங்குறிச்சி..."
3. பிடாரியூர்பட்டயம்-கொங்குநாட்டுச் சமுதாய ஆவணங்கள் பக்கம்-23இல் 2வது பாராவில். பூந்துறை நாட்டிலுள்ள பிடாரியூர் ஈஞ்சக்கூட்டம் கூத்தக் கவுண்டர் மகள் வெள்ளைப்பெண் பழனியம்மாளைக் கருமாபுரம் பொருள்தந்த கூட்டம் பள்ளிக்கூடத்தான் குழந்தை வேலப்பகவுண்டருக்கு மணமுடித்து பிடாரியூரில் 4900 வள்ளக்காட்டை காணியாக கொடுத்ததை
"அதுக்கு முன்னமே குடுமி வேட்டுவன், சிவபிராமணன், கொங்கச்செட்டி, ஈஞ்சங்கூட்டம் ரகுநாதசிங்கவுண்டன் கூத்தக் கவுண்டன் மகள் வெள்ளைப்பெண் பழனியம்மாளை பொருள்தந்த கூட்டம் பள்ளிக்கூடத்தான் குழந்தை வேலப்பகவுண்டருக்கு வெள்ளைப் பழனியம்மாளையும் குடுத்து பிடாரியூரும் குடுத்து விட்டான் ".
ஆதிகருமாபுரம் பொருள்தந்தகுலத்து குலகுறு வரலாறு:-
ஆதிகாலத்தில் பொருள்தந்தகுலத்தாருக்கு குலக்குரு உண்டன வரலாறு பற்றி ஆதிகருமாபுரத்தைச்சேர்ந்த பொருள்தந்தகுலத்து பழம்பெரும் முதியவர் சொன்ன செவிவழிச்செய்தி.
"சிதம்பரத்தில் ஒருஜயர்ருக்கு பதினாறு பையன்கள் அதில் ஒரு பையனை எங்கள் குலகுருவாக இருக்கும்படி கேட்டபோது பையனுக்கு எடைக்கு எடை பொருள்தந்தால் ஒரு பையனை உங்களுக்கு தாரை வார்த்துக்கொடுக்கிறேன் என்றூ சொன்னதன்படி நாங்கள் ஏற்றுக்கொண்டு தராசில் ஒருபக்கம் பையனை வைத்து மறுபக்கம் வெள்ளிபணம்வைத்து பையனை வாங்கி வந்து குருவுக்கான பட்டம்கொடுத்தோம்".
அந்தநாளில் குலகுரு ரெட்டைமாட்டுவண்டியை ஒரு ஆள் ஓட்டிவந்து பத்துநாள் தங்கியிருந்து வசூல்செய்து போவார். இப்படியிருக்கிறநாளில் ஒரு ஆசாமி குருவுக்கு பணம் கொடுக்கமுடியாதுனு சொல்லிவிட்டான் உடனே உனடவீடு நெருப்பிடித்து எரியகடவ என்று சாபம்மிட்டார். அடுத்தநாள் வீட்டில் நெருப்புபிடித்து நூறு மூட்டை கடலக்காயுடன் வெந்துபோனது. அடுத்தவருஷம் குலகுரு வரும்போது ஊர்பூரா அவனேமுன்னின்று வசூல்செய்து குலகுருவுக்கு கொடுத்து அனுப்பினார்.அப்போது நிங்கள் தத்தெடுத்துவந்ததால் நாங்கள் சாபமிட்டல் உடனேபழிக்கும் என்று சொன்னார்.இப்போது ஜயம்பாளையத்தில்தான் இருக்கிறார்.தானமாக 200ஏக்கர் பூமி கொடுத்தோம்.